Latest News :

100 ஏழை குடும்பங்களுக்கு உதவிய அபி சரவணன்!
Saturday April-11 2020

நடிகர் அபி சரவணன் என்பதைவிட சமூக ஆர்வலர் அபி சரவணன், என்றால் அனைவருக்கும் நினைவுக்கு வரும் வகையில், பல்வேறு சமூகப் பணிகளை மேற்கொண்டு வரும் அபி சரவணன், தான் வசிக்கும் பகுதியில் உள்ள 100 ஏழை குடும்பங்களுக்கு தன்னால் முடிந்த உதவியை செய்திருக்கிறார்.

 

’அட்டக்கத்தி’, ‘குட்டிபுலி’ போன்ற படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து, பிறகு ‘கேரளம் நாட்டிலம் பெண்களுடனே’ படத்தின் மூலக் ஹீரோவாக உயர்ந்த அபி சரவணன், ‘பட்டதாரி’, ‘மாயநதி’ என தொடர்ந்து பல படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். தற்போது ‘பிளஸ் ஆர் மைனஸ்’, ‘இறையான்’, ‘அந்த ஒரு நாள்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்து வரும் அபி சரவணன், சினிமாவில் என்னதான் பிஸியாக இருந்தாலும், சமூக பிரச்சினைகளிலும் தன்னை புகுத்திக் கொண்டு தன்னால் முடிந்தவரை சமூகத்திற்கு எதாவது செய்து வருகிறார். 

 

அந்த வகையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கும் ஏழை மக்களுக்கு தன்னால் முடிந்த உதவியை செய்ய வேண்டும் என்று நினைத்தவர், மதுரையில் தான் வசிக்கும் பகுதி அருகே உள்ள 100 ஏழை குடும்பவங்களுக்கு அரிசி, பலசரக்கு மற்றும் காய்கறிகளை வழங்கியுள்ளார்.

 

அபி சரவணனுடன் காருண்யா 5டி என்டர்டைன்மெண்ட் நிறுவனர் ஜெசியும் இணைந்து இந்த உதவியை செய்திருக்கிறார்.

 

Abi Saravanan

 

இது குறித்து அபி சரவணனிடம் கேட்டதற்கு, “கொரோனா பாதிப்பில் இருந்து தப்ப ஒரே வழி நம்மை நாமே தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். அப்படி வீட்டிலே இருக்கும் போது, தினக்கூலி தொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அப்படி பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்று நினைத்தேன். என்னால் பெரிய அளவில் செய்ய முடியவில்லை என்றாலும், என்னால் முடிந்த சிறிய உதவியாக இதை நான் செய்திருக்கிறேன். ” என்றார்.

Related News

6415

”இந்த அளவிற்கு கொண்டாடுவார்கள் என எதிர்பார்க்கவில்லை” - ‘லப்பர் பந்து’ வெற்றி குறித்து ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி பேச்சு
Thursday September-26 2024

அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில், பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில், ஹரிஷ் கல்யாண், அட்ட கத்தி தினேஷ், சுவாசிகா விஜய், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘லப்பர் பந்து’ விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...

இந்தியில் வெற்றி பெற்ற ‘கியாரா கியாரா’ இணையத் தொடர் தமிழ் மற்றும் தெலுங்கிலும் ஒளிபரப்பாகிறது!
Thursday September-26 2024

ஜீ5 தளத்தில் வெளியான ’கியாரா கியாரா’ இணையத் தொடர் பெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து,  செப்டம்பர் 20 முதல் இந்த தொடரின்  தமிழ் மற்றும் தெலுங்கு மொழிப் பதிப்புகளை வெளியிட்டுள்ளது...

விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் ‘பிக் பாஸ் சீசன் 8’! - அக்டோபர 6 ஆம் தேதி ஒளிபரப்பாகிறது
Thursday September-26 2024

தமிழின் முன்னணி தொலைக்காட்சியான  விஜய் டிவியின், பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 8 வரும் அக்டோபர் 6 மாலை 6 மணிக்கு கோலாகலமாக துவங்குகிறது...

Recent Gallery