Latest News :

அஜித் பாணியில் அனைத்து தரப்புக்கும் உதவிய பார்வதி நாயர்!
Saturday April-11 2020

கொரோனா முன் எச்சரிக்கை மூலம் சினிமா தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டிருப்பதை போல, சினிமா பத்திரிகையாளர்களும் பெரிதும் பாதிப்புக்குள்ளாகியுள்ளார்கள். பாதிக்கப்பட்ட சினிமா நிருபர்களுக்கு உதவும் வகையில், சினிமா பத்திரிகையாளர்கள் சங்கம் நிதி திரட்டி வருகிறது.

 

அதன்படி, தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு, நடிகர்கள் அஜித்குமார், கார்த்தி, சிவகார்த்திகேயன், நட்டி, ஒளிப்பதிவாளர் வேல்ராஜ், இயக்குநரும் நடிகருமான கணேஷ் பாபு, தயாரிப்பாளர் பெப்ஸி சிவா, பெப்ஸி அமைப்பு, தயாரிப்பாளர் அக்ஸஸ் பிலிம் பேக்டரி டில்லி பாபு, விநியோகஸ்தர்கள் டிரைடெண்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன், அருள்பதி, படூர் ரமேஷ், இசையமைப்பாளர் சத்யா, நடிகையும், சின்னத்திரை தயாரிப்பாளருமான குட்டி பத்மினி, இயக்குநரும் தயாரிப்பாளருமான சினிஷ் ஆகியோர் சினிமா பத்திரிகையாளர்கள் சங்கத்திற்கு பணமாகவும், பொருட்களாகவும் நன்கொடை வழங்கியிருக்கிறார்கள். மேலும், சிலர் நன்கொடை வழங்க இருக்கிறார்கள்.

 

இந்த நிலையில், அஜித்தின் ‘என்னை அறிந்தால்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி, ’கோடிட்ட இடங்களை நிரப்புக’, ‘என் கிட்ட மோதாதே’ உள்ளிட்ட பல படங்களில் ஹீரோயினாக நடித்த பார்வதி நாயர், சினிமா பத்திரிகையாளர்கள் சங்கத்திற்கு 750 கிலோ (10 kg x 75) அரிசி வழங்கியுள்ளார்.

 

Parvathy Nair

 

மேலும், அஜித் எப்படி அனைத்து தரப்பினருக்கும் நன்கொடை வழங்கினாரோ அதுபோன்று பார்வதி நாயரும், சினிமா தொழிலாளர்களுக்கு உதவும் வகையில், பெப்ஸி அமைப்புக்கு 1500 கிலோ (10 kg x 150) அரிசியை நன்கொடையாக வழங்கியதோடு, பிரதமர் நிவாரண நிதிக்கு ரூ.1 லட்சமும், தமிழக முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.1 லட்சமும் நன்கொடை வழங்கியிருக்கிறார்.

 

Parvathy Nair

 

கடினமான சூழ்நிலையில், சினிமா பத்திரிகையாளர்களின் நிலை அறிந்து உதவி செய்த நடிகை பார்வதி நாயருக்கு சினிமா பத்திரிகையாளர்கள் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது.

 

தற்போது, தமிழில் ‘ஆலம்பனா’ படத்தில் நடித்து வரும் பார்வதி நாயர், மலையாளம், கன்னடம், தெலுங்கு என்று தென்னிந்திய மொழித் திரைப்படங்கள் அனைத்திலும் நடிப்பதோடு, வெப் சீரிஸ்களிலும் நடித்து தனக்கென்று தனி இடத்தை பிடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

6418

”இந்த அளவிற்கு கொண்டாடுவார்கள் என எதிர்பார்க்கவில்லை” - ‘லப்பர் பந்து’ வெற்றி குறித்து ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி பேச்சு
Thursday September-26 2024

அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில், பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில், ஹரிஷ் கல்யாண், அட்ட கத்தி தினேஷ், சுவாசிகா விஜய், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘லப்பர் பந்து’ விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...

இந்தியில் வெற்றி பெற்ற ‘கியாரா கியாரா’ இணையத் தொடர் தமிழ் மற்றும் தெலுங்கிலும் ஒளிபரப்பாகிறது!
Thursday September-26 2024

ஜீ5 தளத்தில் வெளியான ’கியாரா கியாரா’ இணையத் தொடர் பெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து,  செப்டம்பர் 20 முதல் இந்த தொடரின்  தமிழ் மற்றும் தெலுங்கு மொழிப் பதிப்புகளை வெளியிட்டுள்ளது...

விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் ‘பிக் பாஸ் சீசன் 8’! - அக்டோபர 6 ஆம் தேதி ஒளிபரப்பாகிறது
Thursday September-26 2024

தமிழின் முன்னணி தொலைக்காட்சியான  விஜய் டிவியின், பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 8 வரும் அக்டோபர் 6 மாலை 6 மணிக்கு கோலாகலமாக துவங்குகிறது...

Recent Gallery