‘ஜாஸ்மின்’ என்ற படத்தை தயாரித்து இயக்கியிருக்கும் ஜெகன் சாய், ஊரடங்கு உத்தரவு முடிந்த பிறகு அப்படத்தை வெளியிட முடிவு செய்திருக்கும் நிலையில், தனது புதிய படம் ஒன்றை நேற்று அறிவித்துள்ளார். இன்னும் தலைப்பு வைக்கப்படாத இப்படத்தை ஸ்ரீ சிவாஜி சினிமாஸ் நிறுவனம் சார்பில் ஜெகன் சார் தயாரித்து இயக்குகிறார்.
தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் இப்படத்தில் முன்னணி நடிகர், நடிகைகள் நடிப்பதோடு, முன்னணி தொழில்நுட்ப கலைஞர்கள் பணியாற்ற இருக்கிறார்கள். அது பற்றிய முழு அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.
சித்திரை முதல் நாளானா நேற்று இப்படத்தின் பூஜையை எளிமையான முறையில் தனது வீட்டிலேயே ஜெகன் சாய் நடத்தினார்.
அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில், பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில், ஹரிஷ் கல்யாண், அட்ட கத்தி தினேஷ், சுவாசிகா விஜய், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘லப்பர் பந்து’ விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
ஜீ5 தளத்தில் வெளியான ’கியாரா கியாரா’ இணையத் தொடர் பெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, செப்டம்பர் 20 முதல் இந்த தொடரின் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிப் பதிப்புகளை வெளியிட்டுள்ளது...
தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியின், பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 8 வரும் அக்டோபர் 6 மாலை 6 மணிக்கு கோலாகலமாக துவங்குகிறது...