நம்பர் ஒன் காமெடி நடிகராக வலம் வரும் யோகி பாபு, தற்போது கதையின் நாயகனாகவும் நடித்து வருகிறார். அவர் இதுவரை ஹீரோவாக நடித்த அனைத்து படங்களும் ஹிட் என்றாலும், வருடத்திற்கு ஒரு படத்தில் மட்டுமே ஹீரோவாக நடிப்பது, என்ற கொள்கையும் வகுத்துக் கொண்டிருக்கிறார்.
இதற்கிடையே, யோகி பாபுவும், சந்தானமும் இணைந்து நடித்த ‘டகால்டி’ படத்தை தயாரித்த எஸ்.பி. சவுத்தரி, அடுத்து தயாரிக்கும் படத்தில் யோகி பாபு ஹீரோவாக நடிப்பதோடு, படத்திற்கு கதை, திரைக்கதை, வசனமும் எழுதியிருக்கிறாராம். ஏன், படத்தையும் அவர் தான் இயக்கப் போவதகாவும், பேருக்கு வேறு ஒரு இயக்குநர் பெயரை டைடில் கார்டில் போட இருப்பதாகவும் தகவல் உலா வருகிறது.
இந்த நிலையில், யோகி பாபு கதை எழுதி நடிக்கும் படத்தில் நயன்தாராவை முக்கிய கதாப்பாத்திரம் ஒன்றில் நடிக்க வைக்க முயற்சிக்கிறார்களாம். இதற்காக நயனிட யோகி பாபுவே கால்ஷீட் கேட்டிருக்கிறாராம். அதே சமயம், அவர் மறுத்தால், அடுத்த சாய்ஸாக காஜல் அகர்வாலிடம் தேதி கேட்கவும் திட்டமிட்டுள்ளார்களாம்.
ஏற்கனவே, ‘கோலமாவு கோகிலா’ படத்தில் நயன்தாராவை விரட்டி விரட்டி காதலிக்கும் வேடத்தில் நடித்த யோகி பாபு, அப்படத்தில் அவருடன் ஒரு டூயாட் பாடலிலும் ஆடி பாடினார். அப்பாடலும், அதில் யோகி பாபு போட்ட டான்ஸ் ஸ்டெப்பும் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. அதுமட்டும் இன்றி, நயன்தாராவுக்கும் யோகி பாபுவின் பர்பாமன்ஸ் பிடித்துப் போக, அவரது அடுத்தடுத்த படங்களிலும் யோகியை சிபாரிசு செய்தார். இதனால், யோகி பாபுக்கு நயன் நிச்சயம் கால்ஷீட் கொடுப்பார், என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில், பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில், ஹரிஷ் கல்யாண், அட்ட கத்தி தினேஷ், சுவாசிகா விஜய், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘லப்பர் பந்து’ விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
ஜீ5 தளத்தில் வெளியான ’கியாரா கியாரா’ இணையத் தொடர் பெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, செப்டம்பர் 20 முதல் இந்த தொடரின் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிப் பதிப்புகளை வெளியிட்டுள்ளது...
தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியின், பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 8 வரும் அக்டோபர் 6 மாலை 6 மணிக்கு கோலாகலமாக துவங்குகிறது...