Latest News :

மிஷ்கின், சிம்பு இணையும் படத்தை தயாரிக்கும் முன்னணி நிறுவனம்!
Saturday April-18 2020

’துப்பறிவாளன் 2’ படம் மூலம் இயக்குநர் மிஷ்கினுக்கும், நடிகர் விஷாலுக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சினையால், விஷால் மிஷ்கின் பற்றி பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறியதோடு, அவரை வைத்து எந்த தயாரிப்பாளரும் படம் தயாரிக்க கூடாது, என்றும் எச்சரித்தார். அதே சமயம், விஷாலின் குற்றச்சாட்டுக்கு பொது நிகழ்ச்சி ஒன்றில் விளக்கம் அளித்த இயக்குநர் மிஷ்கின், விஷாலை பொருக்கி என்று திட்டினார்.

 

இதற்கு பிறகு, மிஷ்கின் மற்றும் விஷால் இருவரும் இது தொடர்பாக வேறு எங்கேயும் பேசாமல் அமைதியானதோடு, அவர் அவர் வேலையிலும் கவனம் செலுத்த தொடங்கியுள்ளார்கள். அதன்படி, மிஷ்கின் தனது புதுப்படத்தை தொடங்குவதில் தீவிரம் காட்டி வருகிறார்.

 

இதற்கிடையே, மிஷ்கின் சிம்புவை வைத்து படம் இயக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்ட நிலையில், தற்போது சிம்பு இயக்குநர் மிஷ்கின் கூட்டணி உறுதியாகியுள்ளது. மிஷ்கின் சொன்ன கதை சிம்புவுக்கு பிடித்துப் போக, அக்கதைக்கு முழு திரைக்கதை எழுதும் பணியையும் இயக்குநர் மிஷ்கி முடித்துவிட்டதாக கூறப்படுகிறது.

 

கொரோனா பாதிப்பு முடிவடைந்து திரைப்பட படப்பிடிப்புகள் மீண்டும் தொடங்கும் போது, இயக்குநர் மிஷ்கினும் தனது புதிய படத்தின் படப்பிடிப்பை தொடங்கும் அளவுக்கு தயாராக இருக்கிறாராம். ஆனால், ‘மாநாடு’ படம் இருப்பதால், அப்படத்தின் படப்பிடிப்பை பொருத்தே, மிஷ்கினின் படம் தொடங்குவது குறித்து சிம்பு முடிவு செய்ய இருக்கிறாராம்.

 

மிஷ்கின் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படத்தை முன்னணி தயாரிப்பு நிறுவனமான ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாம். ஏற்கனவே மிஷ்கின் இயக்கிய ‘யுத்தம் செய்’ படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரித்தது குறிப்பிடத்தக்கது.

Related News

6442

”இந்த அளவிற்கு கொண்டாடுவார்கள் என எதிர்பார்க்கவில்லை” - ‘லப்பர் பந்து’ வெற்றி குறித்து ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி பேச்சு
Thursday September-26 2024

அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில், பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில், ஹரிஷ் கல்யாண், அட்ட கத்தி தினேஷ், சுவாசிகா விஜய், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘லப்பர் பந்து’ விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...

இந்தியில் வெற்றி பெற்ற ‘கியாரா கியாரா’ இணையத் தொடர் தமிழ் மற்றும் தெலுங்கிலும் ஒளிபரப்பாகிறது!
Thursday September-26 2024

ஜீ5 தளத்தில் வெளியான ’கியாரா கியாரா’ இணையத் தொடர் பெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து,  செப்டம்பர் 20 முதல் இந்த தொடரின்  தமிழ் மற்றும் தெலுங்கு மொழிப் பதிப்புகளை வெளியிட்டுள்ளது...

விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் ‘பிக் பாஸ் சீசன் 8’! - அக்டோபர 6 ஆம் தேதி ஒளிபரப்பாகிறது
Thursday September-26 2024

தமிழின் முன்னணி தொலைக்காட்சியான  விஜய் டிவியின், பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 8 வரும் அக்டோபர் 6 மாலை 6 மணிக்கு கோலாகலமாக துவங்குகிறது...

Recent Gallery