கொரோனாவால் பாதித்திருக்கும் சினிமா தொழிலாளர்களுக்கு உதவி செய்யும் வகையில், பெப்ஸி அமைப்பு நன்கொடை வழங்கிய நடிகர் விஜய், பிரதமர் நிவாரண நிதி மற்றும் தமிழக முதல்வர் நிவாரண நிதிக்கும் நன்கொடை வழங்கினார்.
மேலும், ஆந்திரா, தெலுங்கானா, கேரளா, கர்நாடகம் மற்றும் பாண்டிச்சேரி, என தென்னிந்திய மாநிலங்களின் முதல்வர் கொரோனா நிவாரண நிதிக்கும் விஜய் நன்கொடை வழங்கியதோடு, தனது மக்கள் இயக்கம் மூலம், மாவட்டம் ரீதியாக வறுமையில் சிக்கி தவிக்கும் மக்களுக்கு உதவி செய்வதற்காகவும் ஒரு குறிப்பிட்ட தொகையை ரசிகர் மன்ற நிர்வாகிகளிடம் வழங்கியுள்ளார்.
இந்த நிலையில், சிவகாசி அருகே உள்ள சிவகாமிபுரம் கிராமத்தில் வசிக்கும் பட்டாசு தொழிலாளர்கள் வறுமையில் வாடுவதை அறிந்த, விருதுநகர் மேற்கு மாவட்ட விஜய் மக்கள் இயக்க இளைஞரணியினர், 10 நாட்களுக்கு தேவையான காய்கறிகள், அரிசி மற்றும் மளிகை பொருட்களை, தலைவர் மாரிசெல்வம் தலைமையில் வழங்கியுள்ளார்கள்.
அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில், பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில், ஹரிஷ் கல்யாண், அட்ட கத்தி தினேஷ், சுவாசிகா விஜய், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘லப்பர் பந்து’ விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
ஜீ5 தளத்தில் வெளியான ’கியாரா கியாரா’ இணையத் தொடர் பெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, செப்டம்பர் 20 முதல் இந்த தொடரின் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிப் பதிப்புகளை வெளியிட்டுள்ளது...
தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியின், பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 8 வரும் அக்டோபர் 6 மாலை 6 மணிக்கு கோலாகலமாக துவங்குகிறது...