கொரோனா வைரஸின் பாதிப்பை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதனால், ஏழை, பணக்காரர்கள் என அனைத்து தரப்பினரும் வீட்டுக்குள் முடங்கியிருப்பதோடு, வேலை விஷயமாக வெளியூர் மற்றும் வெளிநாடுகளுக்கு சென்ற சிலர், சொந்த ஊருக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகிறார்கள்.
அந்த வகையில், சினிமா பிரபலங்கள் பலர் தங்களது வீட்டுக்குள் இருந்தாலும், சிலர் படப்பிடிப்பு விஷயமாக வெளி இடங்களில் சிக்கிக் கொண்டிருக்கிறார்கள். இதனால், இவர்கள் தங்களது குடும்பத்தாரை பார்க்க முடியாமல் தவித்து வருவதோடு, அவர்களது குடும்பத்தாரும், வேறு இடத்தில் சிக்கிக்கொண்டவர்கள் நிலை எப்படி இருக்குமோ!, என்று கவலையில் இருக்கிறார்கள்.
இதற்கிடையே, பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகரும், பல ஹாலிவுட் படங்களில் நடித்தவருமான இர்ஃபான் கான், ஊரடங்கு காரணமாக ஜெய்ப்பூரில் சிக்கிக் கொண்டிருக்கிறார்.
இந்த நிலையில், உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த நடிகர் இர்ஃபான் கானின் அம்மா சாயிதா பேகம், கடந்த சனிக்கிழமை உயிரிழந்துவிட்டார். ஆனால், அவரது இறுதி சடங்கில் கலந்துக் கொள்ள பல்வேறு வகையில் இர்ஃபான் கான் முயன்றாலும் அவரால் ஜெய்ப்பூரில் இருந்து வெளியேற முடியவில்லையாம்.
இதையடுத்து, தனது அம்மாவின் இறுதி சடங்கை போனில் பார்த்து கதறி அழுத நடிகர் இர்ஃபான் கான், இந்த நிலை எந்த மகனுக்கும் வர கூடாது என்றும் தெரிவித்துள்ளார்.
அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில், பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில், ஹரிஷ் கல்யாண், அட்ட கத்தி தினேஷ், சுவாசிகா விஜய், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘லப்பர் பந்து’ விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
ஜீ5 தளத்தில் வெளியான ’கியாரா கியாரா’ இணையத் தொடர் பெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, செப்டம்பர் 20 முதல் இந்த தொடரின் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிப் பதிப்புகளை வெளியிட்டுள்ளது...
தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியின், பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 8 வரும் அக்டோபர் 6 மாலை 6 மணிக்கு கோலாகலமாக துவங்குகிறது...