அட்லி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘மெர்சல்’ படம் தீபாவளியன்று வெளியாகியுள்ள நிலையில், விஜயின் அடுத்த படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார். தற்போது ‘ஸ்பைடர்’ பணிகளில் பிஸியாக உள்ள முருகதாஸ் அபப்டத்தின் ரிலிஸிற்கு பிறகு, விஜய் படத்தின் படப்பிடிப்பை தொடங்க உள்ளார். அடுத்த வருடம் ஜனவரி மாதம் விஜய் படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படும் என்றும் முருகதாஸ் அறிவித்துள்ளார்.
இதற்கிடையே, ‘மெர்சல்’ படத்தின் அனைத்து பணிகளும் நேற்றுடன் முடிவடைந்துவிட்டது. இதையடுத்து விஜய் இந்தியாவை விட்டே கிளம்பிவிட்டார்.
ஏற்கனவே தனது குடும்பத்தாரை பார்சிலோனாவுக்கு அனுப்பி வைத்த விஜய், மெர்சல் படத்தின் வியாபாரம் சம்மந்தமான சில பணிகள் இருந்த காரணத்தால், தனது குடும்பத்தாருடன் செல்லவில்லையாம். நேற்று எஞ்சியிருந்த பணியும் முடிந்ததால், இன்று விஜய் பார்சிலோனாவுக்கு கிளம்பிவிட்டார். சென்னையிலிருந்து துபாய்க்குச் சென்று அங்கிருந்து பார்சிலோனாவுக்கு செல்கிறார்.
தனது குடும்பத்தோடு பார்சிலோனாவுக்கு சுற்றுலா சென்றுள்ள விஜய், ‘மெர்சல்’ படம் வெளியீட்டுக்கு முன்பாகவே இந்தியா திரும்ப திட்டமிட்டுள்ளாராம்.
இயக்குநர் சந்து மொண்டேட்டி இயக்கத்தில், நாக சைதன்யா, சாய் பல்லவி நடித்திருக்கும் படம் ‘தண்டேல்’...
சென் ஸ்டுடியோஸ் (ZHEN STUDIOS) சார்பில் தயாரிப்பாளர் புகழ் வழங்கும், தேஜாவு படப்புகழ் இயக்குநர் அரவிந்த் ஶ்ரீநிவாசன் இயக்கத்தில், கிஷன் தாஸ் & ஷ்ம்ருதி வெங்கட் நடித்துள்ள "தருணம்" திரைப்படம், வரும் ஜனவரி 31 ஆம் தேதி, பெரும் எண்ணிக்கையிலான திரையரங்குகளில் உலகமெங்கும் வெளியாகிறது...
தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான சசிகுமார் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ' மை லார்ட்' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது...