Latest News :

வெங்கட் பிரபுக்கு அடித்த ஜாக்பாட்!
Thursday April-30 2020

’சென்னை 600028’, ‘சரோஜா’, ‘மங்காத்தா’ என பல வெற்றிப் படங்களை கொடுத்த இயக்குநர் வெங்கட் பிரபு, இயக்கத்தில் இறுதியாக கடந்த 2016 ஆம் ஆண்டு ‘சென்னை 600028 - 2’ வெளியானது. அதன் பிறகு அவர் இயக்கிய ‘பார்ட்டி’ படம் முடிவடைந்தாலும் வெளியாகமல் இருக்கிறது.

 

இதனால், சுமார் 3 ஆண்டுகள் பட வாய்ப்பில்லாமல் இருந்த வெங்கட் பிரபுவுக்கு சிம்புவை இயக்க வாய்ப்பு கிடைக்க ’மாநாடு’ படத்தை தொடங்கினார். ஆனால், அப்படமும் சில பிரச்சினைகளால் கைவிடப்பட்ட நிலையில், பல பஞ்சாயத்துகளுக்கு பிறகு தற்போது மீண்டும் படப்பிடிப்பு தொடங்கியது. ஆனால், படப்பிடிப்பு தொடங்கிய சில நாட்களிலேயே கொரோனா பிரச்சினையால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது.

 

இப்படி, பல பிரச்சினைகளால் துவண்டு போன வெங்கட் பிரபு, தற்போது கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்தால் எப்படி உலக மக்கள் சந்தோஷப்படுவார்களோ அதுபோன்ற ஒரு சந்தோஷத்தில் இருக்கிறாராம். இதற்கு காரணம் அவர் தயாரித்த ‘ஆர்.கே.நகர்’ திரைப்படம் தானாம்.

 

‘வடகறி’ படத்தை இயக்கிய சரவண ராஜன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் ‘ஆர்.கே.நகர்’. வைபவ் ஹீரோவாக நடித்திருக்கும் இப்படம், நெட்பிளிக்ஸில் வெளியாகியிருக்கிறது. ஜோதிகாவின் ‘பொன்மகள் வந்தாள்’ திரைப்படம் ஓ.டி.டி தளத்தில் ரிலீஸ் ஆவது தொடர்பான பிரச்சினைகளுக்கு இடையே, திடீரென்று இப்படம் நெட்பிளிக்ஸில் வெளியானது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது.

 

இந்த நிலையில், வெங்கட் பிரபுவின் ‘ஆர்.கே.நகர்’ படம் நெட்பிளிக்ஸில் வெளியானது குறித்தும், அதன் மூலம் வெங்கட் பிரபுக்கு அடித்த ஜாக்பாட் பற்றியும் தகவல் ஒன்று கோலிவுட்டில் தீயாக பரவி வருகிறது.

 

அதாவது, ‘ஆர்.கே.நகர்’ படத்தி ரிலீஸ் தொடர்பான பணியில் ஈருபட்டிருந்த தயாரிப்பு தரப்பு, அது தொடர்பான வியாபாரத்தில் ஈடுபட்டதுடன், படத்தை நெட்பிளிக்ஸில் ரிலீஸ் செய்வது பற்றிய பேச்சு வார்த்தையிலும் ஈடுபட்டு இருந்ததம். ஆனால், அந்த பேச்சு வார்த்தை முடிவதற்குள், நெட்பிளிக்ஸில் ‘ஆர்.கே.நகர்’ வெளியாகும் என்று அந்நிறுவனம் விளம்பரம் செய்துவிட்டதாம்.

 

RK Nagar

 

இதை அறிந்து அதிர்ச்சியான, ‘ஆர்.கே.நகர்’ தயாரிப்பு தரப்பு, தங்களிடம் கேட்காமல் இப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டதால், தங்களது படத்தின் வியாபாரம் முடங்கிவிட்டதாகவும், இதனால் தங்களுக்கு பெரிய இழப்பு ஏற்பட்டதாகவும் கூறி நெட்பிளிக்ஸ் மீது வழக்கு தொடர்ந்தார்களாம். இதையடுத்து, இழப்பீடு வழங்கும் வகையில், நெட்பிளிக்ஸ் நிறுவனம் ‘ஆர்.கே.நகர்’ படத்தை ரூ.4.50 கோடிக்கு வாங்கிக் கொண்டதாம்.

 

இந்த தொகை நிச்சயம் படத்தின் பட்ஜெட்டை விட அதிகமானதாக இருக்கும் என்றும், தியேட்டரில் ரிலீஸ் செய்திருந்தால் கூட இந்த தொகையை தயாரிப்பு தரப்பு ஈட்டியிருக்குமா? என்பது சந்தேகம் தான், என்றும் கோல்வுட்டில் பேச்சு அடிபடுகிறது.

Related News

6490

பான் இந்தியா திரைப்படமாக உருவாகும் ‘செளகிதார்’ தொடங்கியது!
Friday July-05 2024

நடிகர் பிருத்வி அம்பர் நடிப்பில் உருவாகும் பான் இந்தியா திரைப்படமான ‘செளகிதார்’ படப்பிடிப்பு பெங்களூரில் உள்ள பந்தே மகாகாளி கோவிலில் சிறப்பான பூஜையுடன் தொடங்கியது...

’கூழாங்கல்’ பட தயாரிப்பாளரின் அடுத்த முயற்சி ’ஜமா’!
Friday July-05 2024

‘கூழாங்கல்’ படத்தை தயாரித்த லேர்ன் & டீச் புரொடக்‌ஷன்ஸ் (Learn & Teach Productions) நிறுவனம் தமிழ்நாட்டில் உள்ள தெருக்கூத்து கலைஞர்களின் வாழ்க்கைமுறை மற்றும் சவால்களை மையமாக வைத்து 'ஜமா' என்ற மற்றொரு யதார்த்தமான படத்துடன் சினிமா ரசிகர்களை கவரத் தயாராக உள்ளது...

’ஒரு நொடி’ வெற்றியை தொடர்ந்து தமன்குமார் நடிக்கும் ‘பார்க்’!
Friday July-05 2024

2012 ஆம் ஆண்டு வெளியான ‘ஆச்சரியங்கள்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமான தமன்குமார், ‘சட்டம் ஒரு இருட்டறை’, ’தொட்டால் தொடரும்’, ‘சேது பூமி’ உள்ளிட்ட பல படங்களில் நாயகனாக நடித்ததோடு, ‘அயோத்தி’ உள்ளிட்ட சில படங்களில் முக்கிய வேடங்களிலும் நடித்திருக்கிறார்...