Latest News :

சரக்குடன் போட்டோ வெளியீடு! - சர்ச்சையில் சிக்கிய நடிகை
Friday May-01 2020

கொரோனா பாதிப்பால் நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் இருப்பதால் நடிகர், நடிகைகள் வீட்டில் முடங்கியிருக்கும் நடிகர், நடிகைகள் அவ்வபோது சில புகைப்படங்களையும், வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார்கள். அந்த வகையில், சர்ச்சை நடிகையான ஸ்ரீ ரெட்டி, புகைப்படம் ஒன்றின் மூலம் புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

 

மீ டூ புகார் மூலம் ஆந்திர சினிமாவையே அதிர வைத்தவர் ஸ்ரீ ரெட்டி. அரை நிர்வாணமாக போராட்டம் நடத்திய இவர், முன்னணி நடிகர்கள், இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் என்று பலர் மீது செக்ஸ் புகார் அளித்ததோடு, அவ்வபோது அவர்களை சோசியல் மீடியாக்களில் கழுவி கழுவி ஊற்றுவார். 

 

இப்படி ஆந்திரா சினிமா பிரபலங்ளுக்கு பெரும் டார்ச்சர் பேபியாக இருந்தவரை, அவர்கள் அங்கிருந்து விரட்டியடிக்க, தமிழகத்திற்குள் நுழைந்த அம்மணி, கோலிவுட் பிரபலங்கள் பலர் மீதும் செக்ஸ் புகார் கூறினார். அவர் புகார் கூறியவர்கள் அனைவரும் மவுனமாக இருக்க, அவருக்கு சம்மந்த இல்லாத சிலர் மட்டும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

 

இதற்கிடையே, ஸ்ரீ ரெட்டியால் புகார் கூறப்பட்ட சிலர் அவருக்கு பட வாய்ப்பு தருவாதாக அறிவித்ததோடு, சில பட வாய்ப்புகளும் அவருக்கு கிடைத்ததால், தமிழகத்திலேயே செட்டிலாக முடிவு செய்த ஸ்ரீ ரெட்டி தற்போது சொகுசு கார், ஆடம்பர பங்களா என்று சென்னையில் வசித்து வருகிறார்.

 

சென்னையில் வசித்து வந்தாலும், தொடர்ந்து ஆந்திர சினிமா பிரபலங்கள் குறித்து சோசியல் மூடியாக்களில் அவ்வபோது சர்ச்சையான பதிவுகளை வெளியிடுபவர், திரிஷா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், அனுஷ்கா என்று பல முன்னணி ஹீரோயின்களை வம்புக்கு இழுக்கும் வகையிலும் பதிவுகளை வெளியிட்டு வருகிறார்.

 

தற்போது ஊரடங்கினால் வீட்டுக்குள்ளேயே இருக்கும் ஸ்ரீரெட்டி, அவ்வபோது தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களிடம் எதிர்ப்பும் வரவேற்பும் பெற்று வருபவர், சமீபகாலமாக சரக்கு பாட்டிகளுடன் இருப்பது போன்ற புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

 

இந்த நிலையில், இன்று மது கோப்பையுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை ஸ்ரீரெட்டி வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்க்கும் ரசிகர்கள், ஊரடங்கில் சரக்கு கிடைக்காமல் நாங்கள் கஷ்ட்டப்படுகிறோம், உங்களுக்கு மட்டும் எப்படி சரக்கு கிடைக்கிறது, என்று கேள்வி கேட்டு வருகிறார்கள்.

 

Sri Reddy

Related News

6493

பான் இந்தியா திரைப்படமாக உருவாகும் ‘செளகிதார்’ தொடங்கியது!
Friday July-05 2024

நடிகர் பிருத்வி அம்பர் நடிப்பில் உருவாகும் பான் இந்தியா திரைப்படமான ‘செளகிதார்’ படப்பிடிப்பு பெங்களூரில் உள்ள பந்தே மகாகாளி கோவிலில் சிறப்பான பூஜையுடன் தொடங்கியது...

’கூழாங்கல்’ பட தயாரிப்பாளரின் அடுத்த முயற்சி ’ஜமா’!
Friday July-05 2024

‘கூழாங்கல்’ படத்தை தயாரித்த லேர்ன் & டீச் புரொடக்‌ஷன்ஸ் (Learn & Teach Productions) நிறுவனம் தமிழ்நாட்டில் உள்ள தெருக்கூத்து கலைஞர்களின் வாழ்க்கைமுறை மற்றும் சவால்களை மையமாக வைத்து 'ஜமா' என்ற மற்றொரு யதார்த்தமான படத்துடன் சினிமா ரசிகர்களை கவரத் தயாராக உள்ளது...

’ஒரு நொடி’ வெற்றியை தொடர்ந்து தமன்குமார் நடிக்கும் ‘பார்க்’!
Friday July-05 2024

2012 ஆம் ஆண்டு வெளியான ‘ஆச்சரியங்கள்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமான தமன்குமார், ‘சட்டம் ஒரு இருட்டறை’, ’தொட்டால் தொடரும்’, ‘சேது பூமி’ உள்ளிட்ட பல படங்களில் நாயகனாக நடித்ததோடு, ‘அயோத்தி’ உள்ளிட்ட சில படங்களில் முக்கிய வேடங்களிலும் நடித்திருக்கிறார்...