தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த தமன்னாவுக்கு, தற்போது தமிழில் பெரிய வாய்ப்புகள் இல்லை என்றாலும், தெலுங்கில் தொடர்ந்து நடித்து வருகிறார். தற்போது கொரோனா பாதிப்பால் வீட்டில் இருக்கும் தமன்னா, சமீபத்தில் தலையணையை உடையாக அணிந்து கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டார்.
இதற்கிடையே, தமன்னாவின் திருமணம் குறித்து அவ்வபோது பல தகவல் வெளியாகி வைரலானாலும், அதனை அவர் வதந்தி என்று மறுப்பும் தெரிவித்து வந்தார்.
இந்த நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல் ரவுண்டரான அப்துல் ரசாக்கை நடிகை தமன்னா திருமணம் செய்துக் கொள்ள இருப்பதாக தகவல் வெளியானதோடு, அவர்கள் ஒன்றாக இருக்கும் புகைப்படம் ஒன்றும் வெளியாகி வைரலாகி வருகிறது.
ஆனால், வழக்கம் போல இதற்கு மறுப்பு தெரிவித்திருக்கும் தமன்ன தரப்பு, துபாயில் நகைக்கடை ஒன்றின் திறப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக தமன்னாவும், கிரிக்கெட் வீரர் அப்துல் ரசாக்கும் கலந்துக் கொண்டார்கள். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை வைத்து இப்படி வதந்தி பரப்பு வருகிறார்கள், என்று தெரிவித்துள்ளனர்.
இதோ அந்த புகைப்படம்,
நடிகர் பிருத்வி அம்பர் நடிப்பில் உருவாகும் பான் இந்தியா திரைப்படமான ‘செளகிதார்’ படப்பிடிப்பு பெங்களூரில் உள்ள பந்தே மகாகாளி கோவிலில் சிறப்பான பூஜையுடன் தொடங்கியது...
‘கூழாங்கல்’ படத்தை தயாரித்த லேர்ன் & டீச் புரொடக்ஷன்ஸ் (Learn & Teach Productions) நிறுவனம் தமிழ்நாட்டில் உள்ள தெருக்கூத்து கலைஞர்களின் வாழ்க்கைமுறை மற்றும் சவால்களை மையமாக வைத்து 'ஜமா' என்ற மற்றொரு யதார்த்தமான படத்துடன் சினிமா ரசிகர்களை கவரத் தயாராக உள்ளது...
2012 ஆம் ஆண்டு வெளியான ‘ஆச்சரியங்கள்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமான தமன்குமார், ‘சட்டம் ஒரு இருட்டறை’, ’தொட்டால் தொடரும்’, ‘சேது பூமி’ உள்ளிட்ட பல படங்களில் நாயகனாக நடித்ததோடு, ‘அயோத்தி’ உள்ளிட்ட சில படங்களில் முக்கிய வேடங்களிலும் நடித்திருக்கிறார்...