ஏப்ரம் மாதம் வெளியாகியிருக்க வேண்டிய விஜயின் ‘மாஸ்டர்’ கொரோனா பிரச்சினையினால் எப்போது வெளியாகும் என்பதே தெரியாமல் இருக்கிறது. இருப்பினும், ஜூன் 1 ஆம் தேதிக்கு திரையரங்குகள் திறக்கப்பட வாய்ப்புள்ளதாக தமிழக முதல்வர் எடப்படி பழனிசாமி கூறியிருப்பதாக, திரையரங்க உரிமையாளர்கள் சங்க தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
அப்படி, ஜூன் மாதம் திரையரங்கங்கள் திறக்கப்பட்டால், ‘மாஸ்டர்’ படம் விஜயின் பிறந்தநாளான ஜூன் 22 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. அதே சமயம், கொரோனா அச்சத்தினால் ரசிகர்கள் தியேட்டருக்கு வருவார்களா? என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது.
இந்த நிலையில், ‘மாஸ்டர்’ படத்தில் வில்லனாக நடித்திருக்கும் விஜய் சேதுபதியின் காட்சிகள் மாஸாக இருக்கிறதாம். அவர் படத்தில் வந்த பிறகே படம் பெரிய படமானதாக, அப்படத்தில் இணை இயக்குநராக பணியாற்றியிருக்கும் ‘மேயாத மான்’ மற்றும் ‘ஆடை’ படங்களை இயக்கிய ரத்னவேலு தெரிவித்திருக்கிறார்.
மாஸ்டர் படத்தை இயக்கியிருக்கும் லோகேஷ் கனகராஜ், படம் குறித்து பெரிதாக பேசாமல் இருந்தாலும், இணை இயக்குநரான ரத்னகுமார், படம் குறித்த சில தகவல்களை அவ்வபோது வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் சமீபத்திய பேட்டி ஒன்றில், ‘மாஸ்டர்’ படம் குறித்து பேசிய ரத்னவேலு, “விஜய் சேதுபதி வந்த பிறகு தான் ‘மாஸ்டர்’ பெரிய படமானது. சாதாரண காட்சிகள் கூட ரசிக்கும்படியான காட்சிகளாக வந்தது. எந்த காட்சியை நீக்குவது, எந்த காட்சியை வைத்துக் கொள்வது என்பதில் பெரிய குழப்பமே ஏற்பட்டது. இருந்தாலும் படத்தின் நீளத்தை கருதி, சில காட்சிகளை மனமில்லாம வெட்டியிருக்கிறோம். இதுவரை பார்த்திராத விஜயை படத்தில் பார்க்கலாம். படம் எப்போது வெளியானாலும், அனைத்து தரப்பினரையும் கவர்ந்துவிடும் என்பது மட்டும் உறுதி.” என்று தெரிவித்துள்ளார்.
வில்லன் விஜய் சேதுபதி மாஸ் காட்டினால், ஹீரோ விஜய் என்ன செய்திருப்பாரோ!
இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில், கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள ‘இந்தியன் 2’ படம் இந்தியா முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது...
அஜித் குமார் உள்ளிட்ட முன்னணி நடிகர்களை வைத்து வெற்றி படங்களை இயக்கிய இயக்குநர் விஷ்ணு வர்தன், பாலிவுட் பக்கம் போனதால் தமிழில் படம் இயக்காமல் இருந்தார்...
எஸ்.ஜே.சினு இயக்கத்தில், பிரபு தேவா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘பேட்ட ராப்’...