திரைப்பட நடிகர், நடிகைகள் சிலர் குற்ற செயல்களில் ஈடுபடுவதும், அதனால் சர்ச்சையில் சிக்குவதும் அவ்வபோது நிகழ்ந்து வருகிறது.
அந்த வகையில், பாலிவுட் சினிமாவின் பிரபல நடிகைகளில் ஒருவரான பூனம் பாண்டே, தனத் டிரைவருடன் சட்டத்தை மீறியதற்காக போலீஸாரிடம் சிக்கியிருக்கிறார்கள். அவர்கள் மீது போலீஸார் வழக்கும் பதிவு செய்துள்ளனர்.
2013 ஆம் ஆண்டு வெளியான ‘நாசா’ என்ற இந்தி படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான பூனம் பாண்டே, தொடர்ந்து இந்தி, தெலுங்கு மற்றும் கன்னட படங்களில் நடித்து வருகிறார்.
கொரோனா ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில், நடிகை பூனம் பாண்டே, ஊரடங்கு உத்தரவை மீறி தனது காரில் ஊர் சுற்றி வந்திருக்கிறார். இதையடுத்து கடந்த ஞாயிற்றுக்கிழமை மும்பையில் போலீஸாரிடம் பிடிபட்ட நடிகர் பூனம் பாண்டே மற்றும் அவரது கார் டிரைவர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில், பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில், ஹரிஷ் கல்யாண், அட்ட கத்தி தினேஷ், சுவாசிகா விஜய், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘லப்பர் பந்து’ விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
ஜீ5 தளத்தில் வெளியான ’கியாரா கியாரா’ இணையத் தொடர் பெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, செப்டம்பர் 20 முதல் இந்த தொடரின் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிப் பதிப்புகளை வெளியிட்டுள்ளது...
தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியின், பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 8 வரும் அக்டோபர் 6 மாலை 6 மணிக்கு கோலாகலமாக துவங்குகிறது...