தொடர் வெற்றி நாயகனாக வலம் வந்த விஜய் சேதுபதி, தற்போது மாஸ் மற்றும் பெரிய பட்ஜெட் பட ஹீரோவாக உருவெடுத்திருந்தாலும், இப்போதும் கதைக்காகவும், கதாபாத்திரத்திற்காகவும் எப்படிப்பட்ட வேடமாக இருந்தாலும் நடிக்க தயாராகத்தான் இருக்கிறார்.
அந்த வகையில், மாஸ் ஹீரோவாக உள்ள விஜய் சேதுபதி, வித்தியாசமான எடக்கு மடக்கான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘எடக்கு’.
யாரும் எதிர்ப்பார்க்காத வித்தியாசமான தோற்றத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள இப்படத்தை எஸ்.சிவன் இயக்க, நிமோ புரொடக்ஷன்ஸ் சார்பில் கே.பாலு தயாரித்திருக்கிறார்.
ஒரு நாள் இரவில் நடக்கும் சம்பவத்தை மையமாக கொண்டு இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளதால், படம் ஆரம்பம் முதல் முடியும் வரை சுவாரஸ்யத்தோடு நகரும், என்று கூறிய தயாரிப்பாளர் கே.பாலு, விஜய் சேதுபதியின் திறமையை மீண்டும் நிரூபிக்கும் படமாகவும் இப்படம் இருக்கும், என்று தெரிவித்தார்.
இப்படத்தில் அமைந்துள்ள சண்டைக்காட்சிகள் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெறும் விதத்தில், தவசி ராஜ் வடிவமைத்துள்ளாராம்.
சேலம், தர்மபுரி, பெங்களூர் நெடுஞ்சாலைகளிலும், அதை சுற்றியுள்ள ஊர்களிலும் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ள ‘எடக்கு’ விரைவில் திரைக்கு வர உள்ளது.
இயக்குநர் சுந்தர்.சி மற்றும் நடிகை நயன்தாரா முதல் முறையாக ‘மூக்குத்தி அம்மன் 2’ படத்திற்காக இணைந்திருக்கிறார்கள்...
புக் ஆப் சினிமா புரொடக்ஷன் நிறுவனம் சார்பில் அனூப் ரத்னா தயாரித்துள்ளார்...
பி.வி பிரேம்ஸ் நிறுவனம் சார்பில் பாபு விஜய் தயாரித்து இயக்கும் படத்தில் ஜெய் மற்றும் மீனாட்சி கோவிந்தராஜன் நடிக்கிறார்கள்...