கொரோனா முன் எச்சரிக்கை நடவடிக்கைக்காக பிறப்பிக்கப்பட்டிருக்கும் ஊரடங்கு சுமார் 60 நாட்களை கடந்திருக்கும் நிலையில், தற்போது சில தளர்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி, திரைப்படங்களுக்கான போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகளை மேற்கொள்ள அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதையடுத்து, பல திரைப்படங்களின் டப்பிங், எடிட்டிங் உள்ளிட்ட பின்னணி வேலைகள் நடைபெற தொடங்கியுள்ளது.
இதற்கிடையே, திரைப்படங்களின் படப்பிடிப்புகள் எப்போது தொடங்கப்படும் என்பது குறித்து எந்த ஒரு தகவலும் தெரியாமல் இருந்த நிலையில், வரும் மே 17 ஆம் தேதிக்குப் பிறகு திரைப்படங்களின் படப்பிடிப்புகள் தொடங்குவது குறித்து முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்த இருப்பதாக அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே, சினிமா திரையரங்கங்கள் வரும் ஜூன் 1 ஆம் தேதி திறக்க வாய்ப்பு இருப்பதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில், பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில், ஹரிஷ் கல்யாண், அட்ட கத்தி தினேஷ், சுவாசிகா விஜய், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘லப்பர் பந்து’ விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
ஜீ5 தளத்தில் வெளியான ’கியாரா கியாரா’ இணையத் தொடர் பெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, செப்டம்பர் 20 முதல் இந்த தொடரின் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிப் பதிப்புகளை வெளியிட்டுள்ளது...
தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியின், பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 8 வரும் அக்டோபர் 6 மாலை 6 மணிக்கு கோலாகலமாக துவங்குகிறது...