கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக மத்திய அரசும், மாநில அரசும் பல்வேறு முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, கடந்த 50 நாட்களுக்கு மேலாக ஊரடங்கு நீடித்து நீடித்து வருவதோடு, நாடு முழுவதும் மதுபானக் கடைகள் மூடப்பட்டிருந்தது. தற்போது தமிழகம், ஆந்திரா, டெல்லி, கர்நாடகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் மதுபானக் கடைகள் திறக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், கேரளாவை சேர்ந்த சீரியல் நடிகை மஞ்சு சீனி, என்பவர் தனது வீட்டில் கணவருடன் சேர்ந்து சாராயம் காசி, போலீசில் பிடிபட்டிருக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவில் மதுக்கடைகள் மூடப்பட்டதால், அங்கு சிலர் கள்ளச்சாரம் காசி விற்பனை செய்து வருகிறார்கள். அவர்களை பிடிக்க கேரள காவல் துறை தனிப்படை அமைத்திருக்கும் நிலையில், சீரியல் நடிகை மஞ்சு சீனி, தனது வீட்டில் கள்ளச்சாரம் காசி விற்பனை செய்யும் ரகசிய தகவல் கிடைத்ததை தொடர்ந்து, அவரது வீட்டில் சோதனை நடத்திய போது, சுமார் 75 லிட்டர் சாராயம் தயாரிப்பதற்கான உபகரணங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கினால் சினிமா மற்றும் சீரியல் படப்பிடிப்புகள் இல்லாததால், வருவாய் இன்றி கஷ்ட்டப்பட்டதனால் தான் சாராம் காசி விற்பனை செய்ததாக நடிக்கை மஞ்சு சீனி தெரிவித்துள்ளார். மேலும், அவருடன் சேர்ந்து சாராயம் காசிய அவரது கணவர், அவருக்கு 4 வது கணவர் என்றும், அவர் மீது கொலை வழக்குகள் இருப்பதும், போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில், பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில், ஹரிஷ் கல்யாண், அட்ட கத்தி தினேஷ், சுவாசிகா விஜய், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘லப்பர் பந்து’ விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
ஜீ5 தளத்தில் வெளியான ’கியாரா கியாரா’ இணையத் தொடர் பெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, செப்டம்பர் 20 முதல் இந்த தொடரின் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிப் பதிப்புகளை வெளியிட்டுள்ளது...
தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியின், பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 8 வரும் அக்டோபர் 6 மாலை 6 மணிக்கு கோலாகலமாக துவங்குகிறது...