கிரிக்கெட் வீரர் டோனியின் வாழ்க்கை திரைப்படமான் ’எம்.எஸ்.டோனி - தி அண்டோல்ட் ஸ்டோரி’ (M.S. Dhoni: The Untold Story) திரைப்படத்தில் டோனியின் வேடத்தில் நடித்த பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை செய்துக் கொண்டார்.
’கை பே சே’ என்ற படத்தின் மூலம் ஹீரோவாக இந்தி சினிமாவில் அறிமுகமான சுஷாந்த் சிங், தொடர்ந்து பல வெற்றிப் படங்களில் நடித்ததோடு, டோனியின் வாழ்க்கை திரைப்படத்தில் டோனியாக நடித்து அசத்தினார். மேலும், இவரது நடிப்பில் 2019 ஆம் ஆண்டு வெளியான மூன்று படங்களும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றன.
இந்த நிலையில், மன அழுத்தம் காரணமாக நடிகர் சுஷாந்த் சிங், இன்று தற்கொலை செய்துக் கொண்டது இந்திய சினிமாவையே அதிர்ச்சியடைய செய்துள்ளது.
34 வயதாகும் சுஷாந்த் சிங், இந்த இளம் வயதில் எதற்கு தற்கொலை செய்துக் கொண்டார், அவருக்கு மன அழுத்தம் ஏற்படும் அளவுக்கு என்ன பிரச்சினை, என்பது குறித்து இதுவரை தெரியவில்லை.
அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில், பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில், ஹரிஷ் கல்யாண், அட்ட கத்தி தினேஷ், சுவாசிகா விஜய், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘லப்பர் பந்து’ விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
ஜீ5 தளத்தில் வெளியான ’கியாரா கியாரா’ இணையத் தொடர் பெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, செப்டம்பர் 20 முதல் இந்த தொடரின் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிப் பதிப்புகளை வெளியிட்டுள்ளது...
தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியின், பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 8 வரும் அக்டோபர் 6 மாலை 6 மணிக்கு கோலாகலமாக துவங்குகிறது...