கிரிக்கெட் வீரர் டோனியின் வாழ்க்கை திரைப்படத்தில் டோனியாக நடித்து புகழ் பெற்ற நடிகர் சுஷாந்த்சிங் ராஜ்புத், நேற்று தனது வீட்டில் தற்கொலை செய்துக் கொண்டார். இளம் வயது நடிகரின் இந்த முடிவு பாலிவுட் சினிமாவை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
சுஷாந்தின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, அவர் தற்கொலை செய்துக்கொண்டதை மருத்துவர்கள் உறுதிப்படுடுத்தியுள்ளனர்.
இந்த நிலையில், சுஷாந்த் தற்கொலை செய்யவில்லை, அவனை யாரோ கொலை செய்துவிட்டார்கள், என்று அவரது உறவினர் ஒருவர் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சுஷாந்தின் தாய் வழியில் மாமா முறை உள்ள ஒருவர், சுஷாந்த் மரணம் குறித்து மீடியாக்களில் பேசி வருகிறார். அவர் கூறுகையில், “சுஷாந்த் மிக தைரியமானவன். அவன் ஒரு போதும் தற்கொலை செய்திருக்க மாட்டான், அவனை யாரோ கொலை தான் செய்துள்ளனர்.” என்று கடுமையாக பேசியிருக்கிறார்.
அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில், பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில், ஹரிஷ் கல்யாண், அட்ட கத்தி தினேஷ், சுவாசிகா விஜய், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘லப்பர் பந்து’ விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
ஜீ5 தளத்தில் வெளியான ’கியாரா கியாரா’ இணையத் தொடர் பெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, செப்டம்பர் 20 முதல் இந்த தொடரின் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிப் பதிப்புகளை வெளியிட்டுள்ளது...
தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியின், பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 8 வரும் அக்டோபர் 6 மாலை 6 மணிக்கு கோலாகலமாக துவங்குகிறது...