முன் எச்சரிக்கை நடவடிக்கையாக இந்தியாவில் கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வந்தாலும், கொரோனாவின் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேலும், சாமாணிய மக்கள் முதல் சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் உள்ளவர்கள் என அனைத்து தரப்பினருக்கும் கொரோனாவினால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.
அந்த வகையில், இந்திய சினிமாவின் பிரபல நடிகரான அமிதாப் பச்சன் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து மும்பை நானாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் அமிதாப் பச்சனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே, அமிதாப் பச்சனின் குடும்பத்தாருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. அப்போது அவரது மகனும் பிரபல நடிகருமான அபிஷேக் பச்சனுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டிருக்கும் அமிதாப் பச்சன், கடந்த 10 நாட்களாக தன்னுடன் நெருக்கமாக இருந்தவர்கள் அனைவரும் கொரோனா பரிசோதனை செய்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.
அமிதாப் பச்சன் மற்றும் அவரது மகனுக்கு கொரோனா தொற்று உறுதியான சம்பவம் பாலிவுட் சினிமாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அபிஷேக் பச்சனின் மனைவியான நடிகை ஐஸ்வர்யா ராய்க்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவரது பரிசோதனை ரிசல்ட் என்னவாக இருக்கும், என்ற எதிர்ப்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது.
அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில், பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில், ஹரிஷ் கல்யாண், அட்ட கத்தி தினேஷ், சுவாசிகா விஜய், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘லப்பர் பந்து’ விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
ஜீ5 தளத்தில் வெளியான ’கியாரா கியாரா’ இணையத் தொடர் பெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, செப்டம்பர் 20 முதல் இந்த தொடரின் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிப் பதிப்புகளை வெளியிட்டுள்ளது...
தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியின், பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 8 வரும் அக்டோபர் 6 மாலை 6 மணிக்கு கோலாகலமாக துவங்குகிறது...