இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், அரசியல் தலைவர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் பலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.
இதற்கிடையே பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் மற்றும் அவரது மகனும் நடிகருமான அபிஷேக் பச்சனுக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், அபிஷேக் பச்சனின் மனைவியான ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட அவரது குடும்பத்தாருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இந்த நிலையில், ஐஸ்வர்யா ராயின் கொரோனா பரிசோதனை முடிவு வெளியாகியுள்ளது. அதில் அவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. மேலும், அபிஷேக் - ஐஸ்வர்யா ராயின் மகள் ஆரத்யாவுக்கும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். அதே சமயம், அமிதாப் பச்சனின் மனைவி ஜெயா பச்சனுக்கு கொரோனா தொற்று இல்லை என்று முடிவு வந்திருக்கிறது.
இந்திய சினிமா மட்டும் இன்றி ஹாலிவுட் சினிமாவிலும் நன்கு அறியப்பட்ட நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு கொரோனா தொற்று உறுதியாகியிருப்பது சினிமா உலகினை மட்டும் இன்றி ரசிகர்களிடமும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில், பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில், ஹரிஷ் கல்யாண், அட்ட கத்தி தினேஷ், சுவாசிகா விஜய், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘லப்பர் பந்து’ விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
ஜீ5 தளத்தில் வெளியான ’கியாரா கியாரா’ இணையத் தொடர் பெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, செப்டம்பர் 20 முதல் இந்த தொடரின் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிப் பதிப்புகளை வெளியிட்டுள்ளது...
தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியின், பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 8 வரும் அக்டோபர் 6 மாலை 6 மணிக்கு கோலாகலமாக துவங்குகிறது...