Latest News :

ஐஸ்வர்யா ராய்க்கு கொரோனா வந்தது இதனால் தானாம்!
Monday July-13 2020

பாலிவுட் நடிகர்கள் அமிதாப் பச்சன் மற்றும் அபிஷேக் பச்சனுக்கு கொரோனா தொற்று உறுதியானது. இவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டு கடந்த 11 ஆம் தேத் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், அவரது குடும்பத்தினர் அனைவருக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

 

அதனப்டி, அபிஷேக்கின் மனைவி ஐஸ்வர்யா ராய், அவரது மகள் மற்றும் அமிதாப் பச்சனின் மனைவி ஜெயா பச்சன் ஆகியோருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது குழந்தைக்கு முதலில் நெகடிவ் என்று ரிசல்ட் வந்ததால் ரசிகர்கள் நிம்மதியடைந்த நிலையில், மீண்டும் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை பாசிட்டிவ் என்று ரிசல்ட் வந்தது. இதனால் ஒட்டு மொத்த திரையுலகமே அதிர்ச்சியடைந்தது.

 

இதையடுத்து ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது மகள் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை மேற்கொண்டு வருகிறார்கள். அவர்களுக்கு கொரோனா தொற்று குறைவாக இருக்கிறதாம். ஆனால், அமிதாப் பச்சன் மற்றும் அபிஷேக் பச்சனுக்கு தொற்று அதிகமாக இருப்பதால் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 

இதற்கிடையே, அமிதாப் பச்சனுக்கு சொந்தமான நான்கு பங்களாக்களை மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்ததோடு, அங்கு பணியாற்றி ஊழியர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்துள்ளனர்.

 

இந்த நிலையில், அமிதாப் பச்சன் குடும்பத்திற்கு கொரோனா பாதிப்பு எப்படி வந்தது, என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அப்போது அபிஷேக் பச்சன் வெப் சீரிஸ் ஒன்றின் டப்பிங் பணிக்காக அடிக்கடி ஸ்டுடியோவுக்கு சென்று வந்துள்ளார். அதன் மூலமாகவே அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. மேலும், அவர் மூலமாகவே ஐஸ்வர்யா ராய் மற்றும் அமிதாப் பச்சனுக்கும் தொற்று பரவி இருப்பதாக கூறப்படுகிறது.

Related News

6781

”இந்த அளவிற்கு கொண்டாடுவார்கள் என எதிர்பார்க்கவில்லை” - ‘லப்பர் பந்து’ வெற்றி குறித்து ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி பேச்சு
Thursday September-26 2024

அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில், பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில், ஹரிஷ் கல்யாண், அட்ட கத்தி தினேஷ், சுவாசிகா விஜய், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘லப்பர் பந்து’ விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...

இந்தியில் வெற்றி பெற்ற ‘கியாரா கியாரா’ இணையத் தொடர் தமிழ் மற்றும் தெலுங்கிலும் ஒளிபரப்பாகிறது!
Thursday September-26 2024

ஜீ5 தளத்தில் வெளியான ’கியாரா கியாரா’ இணையத் தொடர் பெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து,  செப்டம்பர் 20 முதல் இந்த தொடரின்  தமிழ் மற்றும் தெலுங்கு மொழிப் பதிப்புகளை வெளியிட்டுள்ளது...

விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் ‘பிக் பாஸ் சீசன் 8’! - அக்டோபர 6 ஆம் தேதி ஒளிபரப்பாகிறது
Thursday September-26 2024

தமிழின் முன்னணி தொலைக்காட்சியான  விஜய் டிவியின், பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 8 வரும் அக்டோபர் 6 மாலை 6 மணிக்கு கோலாகலமாக துவங்குகிறது...

Recent Gallery