’புரியாத புதிர்’ மற்றும் ‘இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்’ ஆகிய படங்களை இயக்கிய ரஞ்சித் ஜெயக்கொடி மூன்றாவதாக இயக்கும் படம் ‘யாருக்கும் அஞ்சேல்’. கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள இப்படத்தில் கதையின் நாயகியாக பிந்து மாதவி நடிக்கிறார். அவருடன் தர்ஷனா பாணிக் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
கொரோனா பாதிப்புக்கு முன்பே இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தாலும், கொரோனாவின் தீவிரத்தினால் பின்னணி வேலைகள் தடைபட்டது. இதையடுத்து அரசு சினிமா பின்னணி வேலைகளுக்கு அதுமதி அளித்ததை தொடர்ந்து, அரசு அறிவித்த பாதுகாப்பு விதிமுறைகளின்படி சமீபத்தில் ‘யாருக்கும் அஞ்சேல்’ படத்தின் பின்னணி வேலைகள் தொடங்கியது. அதன்படி, பிந்து மாதவி இன்று தனது டப்பிங் பணிகளை தொடங்கினார்.
தர்ட் ஐ என்ட்டர்டெயின்மெண்ட் சார்பில் தேவராஜூலு மார்கண்டேயன் தயாரிக்கும் இப்படத்தில் பிந்து மாதவியும் தர்ஷனா பாணிக்கும் துணிச்சல் மிக்க சகோதரிகளாக நடித்திருக்கின்றனர். சவால் மிகுந்த ஊட்டியின் தட்பவெட்ப சூழ்நிலைகளை வெற்றிகரமாக எதிர்கொண்டு, தொடர்ந்து முப்பது நாட்கள் ஒரே மூச்சில் படப்பிடிப்பை நடத்தி முடித்திருக்கிறது படக்குழு.
ஊட்டியில் உள்ள தங்கள் பாரம்பரிய சொத்தை விற்பனை செய்வதற்காக வெளிநாட்டிலிருந்து வரும் சகோதரிகள் இருவருக்கும் ஏற்படும் உயிருக்கு ஆபத்தான பிரச்னைகளையும், அவர்கள் அதை எவ்வாறு எதிர்கொண்டு போராடுகிறார்கள் என்பதை விறுவிறுப்பாக சொல்வது தான் ‘யாருக்கும் அஞ்சேல்’ படத்தின் கதை.
அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில், பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில், ஹரிஷ் கல்யாண், அட்ட கத்தி தினேஷ், சுவாசிகா விஜய், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘லப்பர் பந்து’ விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
ஜீ5 தளத்தில் வெளியான ’கியாரா கியாரா’ இணையத் தொடர் பெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, செப்டம்பர் 20 முதல் இந்த தொடரின் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிப் பதிப்புகளை வெளியிட்டுள்ளது...
தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியின், பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 8 வரும் அக்டோபர் 6 மாலை 6 மணிக்கு கோலாகலமாக துவங்குகிறது...