தமிழ் சினிமாவில் பாடகியாகவும், நடிகையாகவும் வலம் வந்த ஆண்ட்ரியா, ‘தரமணி’ என்ற வெற்றி படத்தின் மூலம் நல்ல நடிகை என்று பாராட்டப்பட்டாலும், அப்படத்திற்குப் பிறகு அவருக்கு வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை. இதனால் கடுப்பாகி பல கருத்துக்களை பகிர்ந்து வந்தவர், திடீரென்று காணாமால் போய்விட்டார்.
இதற்கிடையே அரசியல் வாரிசு நடிகர் ஒருவருடன் தான் நெருங்கி பழகியதால் உடல் மற்றும் மன ரீதியாக பாதிக்கப்பட்டேன் என்றும் அதனால் சில மாதங்கள் சிகிச்சை பெற்றேன், என்றும் கூறிய ஆண்ட்ரியா, அந்த நபர் யார்? என்பதை அறிவிக்கப் போவதாகவும் கூறினார். ஆண்ட்ரியா கூறிய நபர் யார்? என்று பல யூகங்கள் வெளியான நிலையில், அந்த நபர் பற்றி ஆண்ட்ரியா எதுவும் சொல்லாமல் மவுனம் காத்தார்.
அதே சமயம், ஆண்ட்ரியாவுக்கு பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை. இதற்கு காரணம், ஆண்ட்ரியா அரசியல் வாரிசு பற்றி வெளியிட்ட சர்ச்சை தகவல்களே காரணம், என்றும் கூறப்பட்டது.
இந்த நிலையில், திரைப்பட வாய்ப்புகள் கிடைக்காததால் குறும்படங்களில் நடிக்க ஆண்ட்ரியா முடிவு செய்துள்ளாராம். அதன்படி, முன்னணி நிறுவனம் ஒன்றுக்கு ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான ராஜீவ் மேனன் இயக்கும் குறும்படத்தில் ஆண்ட்ரியா நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளாராம். இந்த குறும்படத்துடன் மேலும் சில இணைய தொடர்களிலும் நடிக்க ஆண்ட்ரியா நடிக்க ஒப்பந்தமாகியிர்ப்பதால் அவரை இனி ஒடிடி தளத்தில் தாராளமாக பார்க்கலாம், என்று கூறப்படுகிறது.
அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில், பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில், ஹரிஷ் கல்யாண், அட்ட கத்தி தினேஷ், சுவாசிகா விஜய், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘லப்பர் பந்து’ விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
ஜீ5 தளத்தில் வெளியான ’கியாரா கியாரா’ இணையத் தொடர் பெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, செப்டம்பர் 20 முதல் இந்த தொடரின் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிப் பதிப்புகளை வெளியிட்டுள்ளது...
தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியின், பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 8 வரும் அக்டோபர் 6 மாலை 6 மணிக்கு கோலாகலமாக துவங்குகிறது...