அஜித், சிம்ரன், ஜோதிகா நடிப்பில் கடந்த 1999 ஆம் ஆண்டு வெளியான படம் ‘வாலி’. இயக்குநர் எஸ்.ஜே.சூர்யாவின் முதல்படமான இப்படம் அஜித்தின் மார்க்கெட்டை உயர்த்தியதோடு, அவரது சினிமா வாழ்க்கையை சரிவில் இருந்தும் மீட்டது.
இந்த நிலையில், இப்படத்தின் இந்தி ரீமேக் உரிமையை தயாரிப்பாளர் போனி கபூர் பெற்றிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்துடன் 2006 ஆம் ஆண்டு அஜித் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற ‘வரலாறு’ படத்தின் இந்தி ரீமேக் உரிமையையும் அவர் பெற்றிருக்கிறாராம்.
இவ்விரு படங்களில் ஒன்றை அவர் இந்தியில் ரீமேக் செய்ய இருப்பதாகவும், அதில் ஹீரோவாக அஜித்தே நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
போனி கபூர் தயாரிப்பில் ‘நேர்கொண்ட பார்வை’ படத்தில் நடித்த அஜித், தற்போது ‘வலிமை’ படத்தில் நடித்து வருகிறார். கொரோனா பாதிப்பால் இப்படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ள நிலையில், அரசு படப்பிடிப்புக்கு அனுமதி அளித்தாலும் படப்பிடிப்பை தொடங்க வேண்டாம் என்றும், கொரோனா பிரச்சினை முழுவதுமாக சரியான பிறகே படப்பிடிப்பை மீண்டும் தொடங்க வேண்டும், என்று ‘வலிமை’ படக்குழுவுக்கு அஜித்து தெரிவித்து விட்டார்.
இதனால், அப்செட்டான போனி கபூருக்கும் அஜித்துக்கும் இது தொடர்பாக கருத்து வேறுபாடு ஏற்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. அதே சமயம், அஜித்தை சமாதானப்படுத்துவதற்காகவே அவரின் சினிமா வாழ்க்கையில் முக்கியமான படங்களின் ரீமேக் உரிமையை பெற்று இந்தியில் படம் தயாரிக்கும் முயற்சியில் போனி கபூர் ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
எது உண்மை என்பது, கொரோனா பிரச்சினை முடிவுக்கு வந்த பிறகே தெரியும்.
அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில், பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில், ஹரிஷ் கல்யாண், அட்ட கத்தி தினேஷ், சுவாசிகா விஜய், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘லப்பர் பந்து’ விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
ஜீ5 தளத்தில் வெளியான ’கியாரா கியாரா’ இணையத் தொடர் பெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, செப்டம்பர் 20 முதல் இந்த தொடரின் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிப் பதிப்புகளை வெளியிட்டுள்ளது...
தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியின், பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 8 வரும் அக்டோபர் 6 மாலை 6 மணிக்கு கோலாகலமாக துவங்குகிறது...