வனிதாவின் 3 வது திருமணத்திற்கு எதிராகவும், பீட்டர் பாலின் முதல் மனைவிக்கு ஆதரவாகவும் குரல் கொடுக்கிறேன், என்று கூறிக்கொண்டு யுடியுபில் வீடியோ வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியவர் சூர்யா தேவி. இவர் வனிதாவை மிக கடுமையாக விமர்சித்து வெளியிடும் வீடியோக்களில் மிக ஆபாசமாக பேசுவதோடு, தனது உடல் செய்கைகளையும் ஆபாசமாக செய்கிறார். இதற்கு பல நெட்டிசன்கள் வரவேற்பு தெரிவித்து வருவதால், சூர்யா தேவி வீடியோ வெளியிடுவதை தற்போது வரை தொடர்ந்துக் கொண்டிருக்கிறார்.
இதற்கிடையே, சூர்யா தேவி குறித்து வனிதா காவல் துறையில் புகார் அளித்ததோடு, அவர் பற்றிய பகீர் பின்னணி குறித்த ஆதாரங்களையும் வெளியிட்டார். அப்போதும் சூர்யா தேவி, வனிதாவை மிரட்டி வீடியோ வெளியிட்டார். சூர்யா தேவிக்கு லட்சுமி ராமகிருஷ்ணன் போன்ற பிரபலங்கள் ஆதரவு தெரிவித்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், அனைத்து மக்கள் அரசியல் கட்சியின் நிறுவனர் தலைவரான ராஜேஸ்வரி பிரியா, சூர்யா தேவிக்கு கண்டனம் தெரிவித்திருப்பதோடு, பணத்திற்காக இப்படி ஒரு இழிவான செயலில் ஈடுபடும் சூர்யா தேவி, இதை இத்துடன் நிறுத்திக் கொள்ள வேண்டும், இல்லை என்றால் அவர் மீது கடுமையான நடவடிக்கை, சட்ட ரீதியில் எடுக்கப்படும், என்று எச்சரித்துள்ளார்.
இது குறித்து சமீபத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்த ராஜேஸ்வரி பிரியா, சூர்யா தேவி பற்றி பல திடுக்கிடும் தகவல்களை கூறியதோடு, அவரை கடுமையாக எச்சரித்தார்.
இதோ அந்த வீடியோ,
அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில், பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில், ஹரிஷ் கல்யாண், அட்ட கத்தி தினேஷ், சுவாசிகா விஜய், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘லப்பர் பந்து’ விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
ஜீ5 தளத்தில் வெளியான ’கியாரா கியாரா’ இணையத் தொடர் பெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, செப்டம்பர் 20 முதல் இந்த தொடரின் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிப் பதிப்புகளை வெளியிட்டுள்ளது...
தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியின், பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 8 வரும் அக்டோபர் 6 மாலை 6 மணிக்கு கோலாகலமாக துவங்குகிறது...