கொரோனா வைரஸ் பரவல் நாடு முழுவதும் அதிகரித்து வந்தாலும், குணமடைபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவது ஆறுதல் அளிக்கிறது. மேலும், இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பூசி மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதனையும் நடவடிக்கை தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் தொடங்கியுள்ளது.
இதற்கிடையே, சினிமா பிரபலங்கள் பலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருவது திரையுலகத்தினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. தமிழ் சினிமாவை சேர்ந்த பிரபல இயக்குநர்கள் மற்றும் நடிகர்கள் சிலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தங்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை மேற்கொண்டு வருவதாக கூறப்பட்டது. ஆனால், இது குறித்து எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.
இந்த நிலையில், சர்ச்சை நடிகை என்று பெயர் எடுத்த தமிழ் நடிகையான கஸ்தூரி கொரோனாவால் பாதிக்கப்பட்டு, வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவலை நடிகை வனிதா விஜயகுமார் தெரிவித்துள்ளார்.
வனிதாவின் மூன்றாம் திருமணம் தொடர்பாக பல பரபரப்பு சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. சூர்யா தேவி என்ற பெண் ஆபாசமாக பேசி வீடியோ வெளியிட்டு வந்த நிலையில், திரைப்பட தயாரிப்பாளர் ரவீந்திரன் பேசி வந்த நிலையில், இந்த விவகாரத்தில் நடிகைகள் லட்சுமி ராமகிருஷ்ணன் மற்றும் கஸ்தூரியும் வனிதாவுக்கு எதிராக பேசி வருகிறார்கள்.
இது தொடர்பாக வனிதா காவல் நிலையத்தில் புகார் அளிக்க, நடவடிக்கை மேற்கொண்ட காவல் துறை, நேற்று மாலை சூர்யா தேவியை விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றது. அதேபோல், ரவீந்திரன், நடிகைகள் கஸ்தூரி, லட்சுமி ராமகிருஷ்ணன் ஆகியோரையும் விசாரணைக்கு அழைத்தது.
ஆனால், நடிகை கஸ்தூரி, தனக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பதாகவும், அதனால் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தாராம். லட்சுமி ராமகிருஷ்ணன், தான் கடந்த 5 மாதமாக வீட்டை விட்டு வெளியே வரவில்லை, என்று கூறி மறுப்பு தெரிவித்துள்ளனர்.
அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில், பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில், ஹரிஷ் கல்யாண், அட்ட கத்தி தினேஷ், சுவாசிகா விஜய், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘லப்பர் பந்து’ விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
ஜீ5 தளத்தில் வெளியான ’கியாரா கியாரா’ இணையத் தொடர் பெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, செப்டம்பர் 20 முதல் இந்த தொடரின் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிப் பதிப்புகளை வெளியிட்டுள்ளது...
தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியின், பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 8 வரும் அக்டோபர் 6 மாலை 6 மணிக்கு கோலாகலமாக துவங்குகிறது...