’காதல் கொண்டேன்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமான சோனியா அகர்வால், தொடர்ந்து ‘7ஜி ரெயின்போ காலணி’, ‘திருட்டுப்பயலே’, ’புதுப்பேட்டை’, ‘மதுர’ உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் நடித்து பிஸியான நடிகையாக இருந்த போதே இயக்குநர் செல்வராகவனை காதல் திருமணம் செய்துக் கொண்டார்.
2006 செல்வராகவனை திருமணம் செய்துக் கொண்ட சோனியா அகர்வால், 2010 ஆம் ஆண்டு அவரிடம் இருந்து விவாகரத்து பெற்றதோடு, அவரிடம் ரூ.2 கோடி இழப்பீடாக பெற்றுக் கொண்டார். இதையடுத்து மீண்டும் சினிமாவில் நடிப்பதில் ஆர்வம் காட்டிய சோனியா அகர்வாலுக்கு விவேக்குக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. மேலும், அவர் எதிர்ப்பார்த்தபடி கதாநாயகி வாய்ப்பு கிடைக்காததால், கிடைத்த வாய்ப்புகளில் நடித்து வந்தவருக்கு, அந்த வாய்ப்புகளும் குறைந்தது.
இருப்பினும், தெலுங்கு, மலையாளம் என்று பிற மொழிகளிலும் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்த சோனியா அகர்வால், தற்போதைய ஊரடங்கினால் படப்பிடிப்பு இல்லாமல் வீட்டில் இருந்தார். இதற்கிடையே தனது நண்பர்களுடன் இணைந்து புதிய தொழிலில் ஈடுபடும் முயற்சியில் இறங்கியவர், திரிஷா, ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பல சினிமா நடிகைகளுக்கு ஆடை வடிவமைப்பாளராக இருக்கும் பிரபல ஆடை வடிவமைப்பாளரான சிட்னி ஸ்லேடனுடன் இணைந்து புதிய தொழில் ஒன்றை தொடங்கியுள்ளார்.
’டேல் ஆப் டூ’ (Tale of two) என்ற பெயரில் சோனியா அகர்வாலும் அவரது நண்பர்களுடன் தொடங்கியுள்ள இந்த நிறுவனம், திருமண நிகழ்ச்சிகளை வழக்கமாக அல்லாமல் கிரியேட்டிவாக செய்துக் கொடுக்கும். இந்த நிறுவனத்தில் சோனியா அகர்வால் திருமண வடிவமைப்பு இயக்குநராக பொறுப்பேற்றுள்ளார். சிட்னி ஸ்லேடன் ஸ்டைலிங் இயக்குநராக பொறுப்பேற்றுள்ளார். இவர்களுடன் ஆனந்த் பால்கி என்பவர் நிறுவன இயக்குநராகவும், அவரது மனைவி பிரியதர்ஷினி விற்பனை இயக்குநராகவும் பொறுப்பேற்றுள்ளார்.
இன்று பூஜையுடன் ஆரம்பமாகியுள்ள சோனியா அகர்வால், சிட்னி ஸ்லேடன், ஆனந்த் பால்கி மற்றும் பிரியதர்ஷினி ஆனந்த் ஆகியோரது இந்நிறுவனத்திற்கு பிரபலங்கள் பலர் வாழ்த்து கூறி வருகிறார்கள்.
அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில், பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில், ஹரிஷ் கல்யாண், அட்ட கத்தி தினேஷ், சுவாசிகா விஜய், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘லப்பர் பந்து’ விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
ஜீ5 தளத்தில் வெளியான ’கியாரா கியாரா’ இணையத் தொடர் பெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, செப்டம்பர் 20 முதல் இந்த தொடரின் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிப் பதிப்புகளை வெளியிட்டுள்ளது...
தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியின், பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 8 வரும் அக்டோபர் 6 மாலை 6 மணிக்கு கோலாகலமாக துவங்குகிறது...