Latest News :

தனியார் நிறுவனத்தின் மோசடி! - நயன்தாராவுக்கு ஏற்பட பல கோடி இழப்பு
Tuesday July-28 2020

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நயன்தாரா, தற்போது ஏகப்பட்ட திரைப்படங்களில் நடித்து வருகிறார். தென்னிந்தியாவிலேயே அதிகம் சம்பள வாங்கும் நடிகையான நயன்தாரா, எத்தனை கோடி சம்பளம் கேட்டாலும் அதை கொடுக்க பல தயாரிப்பாளர்கள் ஆர்வம் காட்டுகிறார்கள்.

 

இப்படி திரைப்படங்களு மூலம் கோடி கோடியாய் சம்பாதித்து வரும் நயன்தாரா, அந்த பணத்தை நிலத்தின் மீது முதலிடு செய்த நிலையில், தற்போது அதில் பல கோடிகள் அவருக்கு இழப்பு ஏற்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

ஐதராபாத்தைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் நிறுவனம் ஒன்று, பெங்களூர், ஐதராபாத் ஆகிய நகரங்களில் நிலங்களை விற்பனை செய்து வருகிறது. விவசாயிகளிடம் இருந்து ஏக்கர் கணக்கில் நிலங்களை கையகப்படுத்தி, அந்த நிலங்களை கோடி கணக்கான விலையில் அந்நிறுவனம் விற்று வருவதாக கூறப்படுகிறது. அதில் நயன்தாராவும் ஒருவராம்.

 

இந்த நிலையில், நயன்தாரா வாங்கியிருக்கும் நிலை, நீர்நிலை புறம்போக்கு நிலம் என்பது தெரிய வந்துள்ளதாம். ரியல் எஸ்டேட் நிறுவனம் நயன்தாராவை ஏமாற்றி அந்த நிலத்தை விற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது. நயன்தாரா மட்டும் இன்றி ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட மேலும் சில நடிகைகளும் அந்த இடத்தில் நிலம் வாங்கியிருக்கிறார்களாம்.

 

ஐதராபாத்தில் இருந்து சுமார் 30 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் அந்த நிலம், சுமார் 3000 ஏக்கர் சாகுபடிக்குத் தேவையான மழைநீர் பிடித்து வைக்கும் ஆதாரம் என்று தெரிய வந்துள்ளது. அதனால், அந்த இடத்தில் நிலம் வாங்கிய நயன்தாரா உள்ளிட்ட ஏராளமான சினிமா பிரபலங்கள் தலையில் துண்டை போட்டுக் கொண்டுள்ளனர்.

 

Related News

6843

”இந்த அளவிற்கு கொண்டாடுவார்கள் என எதிர்பார்க்கவில்லை” - ‘லப்பர் பந்து’ வெற்றி குறித்து ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி பேச்சு
Thursday September-26 2024

அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில், பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில், ஹரிஷ் கல்யாண், அட்ட கத்தி தினேஷ், சுவாசிகா விஜய், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘லப்பர் பந்து’ விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...

இந்தியில் வெற்றி பெற்ற ‘கியாரா கியாரா’ இணையத் தொடர் தமிழ் மற்றும் தெலுங்கிலும் ஒளிபரப்பாகிறது!
Thursday September-26 2024

ஜீ5 தளத்தில் வெளியான ’கியாரா கியாரா’ இணையத் தொடர் பெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து,  செப்டம்பர் 20 முதல் இந்த தொடரின்  தமிழ் மற்றும் தெலுங்கு மொழிப் பதிப்புகளை வெளியிட்டுள்ளது...

விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் ‘பிக் பாஸ் சீசன் 8’! - அக்டோபர 6 ஆம் தேதி ஒளிபரப்பாகிறது
Thursday September-26 2024

தமிழின் முன்னணி தொலைக்காட்சியான  விஜய் டிவியின், பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 8 வரும் அக்டோபர் 6 மாலை 6 மணிக்கு கோலாகலமாக துவங்குகிறது...

Recent Gallery