தென்னிந்திய சினிமாவின் முன்னணி பாடகரான எஸ்.பி.பாலசுப்ரமணியம், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் ஆயிரத்திற்கு மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். பாடுவதோடு பல திரைப்படங்களில் முக்கியமான கதாப்பாத்திரங்களிலும் நடித்திருக்கிறார்.
இதற்கிடையே, கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனாவால் எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாதிக்கப்பட்டார். மேலும், அவரது உடல் நிலை குறித்து சில தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அவரே வீடியோ லைவில் வந்து ரசிகர்களிடம் பேசியதால் நிம்மதியடைந்தனர்.
இந்த நிலையில், எஸ்.பி.பி சிகிச்சை பெற்று வரும் தனியார் மருத்துவமனை, அவரது உடல் நிலை குறித்து இன்று வெளியிட்டிருக்கும் அறிவிப்பு அனைவரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.
அதாவது, எஸ்.பி.பி-யின் உடல் நிலை மிகவும் மோசமடைந்துள்ளதாகவும், அவரை காப்பாற்ற மருத்துவர்கள் தொடர்ந்து போராடி வருவதாகவும் தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் சினிமா பிரபலங்களும், ரசிகர்களும் கவலை அடைந்துள்ளனர்.
அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில், பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில், ஹரிஷ் கல்யாண், அட்ட கத்தி தினேஷ், சுவாசிகா விஜய், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘லப்பர் பந்து’ விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
ஜீ5 தளத்தில் வெளியான ’கியாரா கியாரா’ இணையத் தொடர் பெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, செப்டம்பர் 20 முதல் இந்த தொடரின் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிப் பதிப்புகளை வெளியிட்டுள்ளது...
தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியின், பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 8 வரும் அக்டோபர் 6 மாலை 6 மணிக்கு கோலாகலமாக துவங்குகிறது...