தொலைக்காட்சி தொடர்களில் முதன்மை தொடராக ‘செம்பருத்தி’ தொடர் உள்ளது. ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் இந்த தொடர் தான் டி.ஆர்.பி ரேட்டிங்கில் நம்பர் ஒன். இதனை முறியடிக்க மற்றொரு முன்னணி சேனல் எடுக்கும் அத்தனை முயற்சிகளையும் செம்பருத்தி தொடர் முறியடித்து வருகிறது.
இதற்கிடையே, ‘செம்பருத்தி’ தொடரில் முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்து வந்த பரதா நாயுடு, திடீரென்று அத்தொடரில் இருந்து நீக்கப்பட்டார். ஆனால், அதற்கான காரணத்தை ஜீ தமிழ் தொலைக்காட்சி தெரிவிக்காத நிலையில், பரதா நாயுடு தற்போது தெரிவித்துள்ளார்.
பரதா நாயுடுக்கு கடந்த பிப்ரவரி மாதம் திருமணம் நடைபெற்றது அனைவரும் அறிந்தது தான். அவர் தனது திருமணத்திற்காக சில நாட்கள் விடுமுறை கேட்டாராம். அதற்காக அவரை சீரியலில் இருந்தே தூக்கி விட்டார்களாம்.
அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில், பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில், ஹரிஷ் கல்யாண், அட்ட கத்தி தினேஷ், சுவாசிகா விஜய், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘லப்பர் பந்து’ விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
ஜீ5 தளத்தில் வெளியான ’கியாரா கியாரா’ இணையத் தொடர் பெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, செப்டம்பர் 20 முதல் இந்த தொடரின் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிப் பதிப்புகளை வெளியிட்டுள்ளது...
தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியின், பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 8 வரும் அக்டோபர் 6 மாலை 6 மணிக்கு கோலாகலமாக துவங்குகிறது...