Latest News :

அந்த படத்தால் தான் நடிப்பதையே நிறுத்திவிட்டேன் - ஆண்டி நடிகையின் அலறல்
Wednesday September-02 2020

சிறு சிறு வேடங்களில் நடித்து வரும் சில நடிகைகள், ஒரே ஒரு காட்சியின் மூலம் ரசிகர்களிடம் பிரபலமாகி விடுகிறார்கள். காரணம், அவர்கள் நடிக்கும் சில கதாப்பாத்திரங்கள் அப்படி அமைந்துவிடுகிறது. அந்த வகையில், சாய் ரமணி இயக்கத்தில் ஜீவா இரட்டை வேடத்தில் நடித்த ‘சிங்கம் புலி’ படத்தில் இளம் பெண்ணுக்கு அம்மாவாக ஒரு சில காட்சிகளில் நடித்து பிரபலமானவர் நீலு.

 

இவர் அதற்கு முன்பு ‘ஆயுத எழுத்து’, ‘வில்லன்’, ‘ஆஞ்சநேயா’, ‘குண்டக்க மண்டக்க’ என்று பல படங்களில் நடித்திருந்தாலும், ‘சிங்கம் புலி’ படத்தின் மூலம் பிரபலமாகிவிட்டார். இளம் பெண்ணுக்கு அம்மாவான இவரை ஜீவா சைட் அடிப்பதோடு, இவரது மகளையும் சைட் அடிப்பார். ஒரே வீட்டில் இருக்கும் இருவரையும் ஜீவா ஒன்றாக வைத்து சைட் அடிக்க, அந்த நேரத்தில் சாலையில், பசு மற்றும் கன்றை ஒருவர் ஓட்டிச் செல்வது போன்ற காட்சியையும் இயக்குநர் சாய் ரமணி வைத்திருந்தார்.

 

இரட்டை அர்த்தம் கொண்ட இந்த காட்சியின் மூலம் பிரபலமான நீலுவை ரசிகர்கள் செல்லமாக ஆண்டி என்று அழைக்க தொடங்கி விட்டார்கள். மேலும், அவரது புகைப்படங்களை வைத்து டிரால் செய்யவும் தொடங்கி விட்டார்கள்.

 

இந்த நிலையில், ‘சிங்கம் புலி’ படத்தில் தன்னை மிக ஆபாசமாக காட்டியதாக பேட்டி ஒன்றில் புகார் கூறியிருக்கும் நடிகை நீலு, அப்படத்தினால் தான், நடிப்பதையே தான் நிறுத்திவிட்டதாகவும் கூறியுள்ளார்.

 

Actress Neelu

 

முதலில், காட்சியை விவரித்த போது, ஏதோ சைட் அடிக்கும் காட்சி, என்று விவரித்தார்களாம். பிறகு அதை படமாக்கும் போது அதிக காட்சிகள் இருந்ததால் அவர் மகிழ்ச்சியாக நடித்தாராம். ஆனால், அதை திரையில் பார்க்கும் போது பெரும் ஆபாசமாக காட்டியுள்ளார்கள். அது பற்றி தன்னிடம் எதுவும் கூறவில்லை, என்று தெரிவித்த நீலு, அப்படிப்பட்ட காட்சியில் நடித்ததால் தனது குடும்பத்தில் சில சிக்கள்களும் ஏற்பட்டதாகவும், அதனால் நடிப்பதையே தான் நிறுத்தி விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

Related News

6919

”இந்த அளவிற்கு கொண்டாடுவார்கள் என எதிர்பார்க்கவில்லை” - ‘லப்பர் பந்து’ வெற்றி குறித்து ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி பேச்சு
Thursday September-26 2024

அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில், பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில், ஹரிஷ் கல்யாண், அட்ட கத்தி தினேஷ், சுவாசிகா விஜய், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘லப்பர் பந்து’ விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...

இந்தியில் வெற்றி பெற்ற ‘கியாரா கியாரா’ இணையத் தொடர் தமிழ் மற்றும் தெலுங்கிலும் ஒளிபரப்பாகிறது!
Thursday September-26 2024

ஜீ5 தளத்தில் வெளியான ’கியாரா கியாரா’ இணையத் தொடர் பெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து,  செப்டம்பர் 20 முதல் இந்த தொடரின்  தமிழ் மற்றும் தெலுங்கு மொழிப் பதிப்புகளை வெளியிட்டுள்ளது...

விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் ‘பிக் பாஸ் சீசன் 8’! - அக்டோபர 6 ஆம் தேதி ஒளிபரப்பாகிறது
Thursday September-26 2024

தமிழின் முன்னணி தொலைக்காட்சியான  விஜய் டிவியின், பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 8 வரும் அக்டோபர் 6 மாலை 6 மணிக்கு கோலாகலமாக துவங்குகிறது...

Recent Gallery