'வனமகன்' படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான சாயீஷா, தொடர்ந்து கடைக்குட்டி சிங்கம், ஜுங்கா, கஜினிகாந்த் உள்ளிட்ட பல படங்களில் நடித்து வந்த நிலையில், நடிகர் ஆர்யாவை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். தற்போது சாயீஷாவும், ஆர்யாவும் ஜோடியாக டெட்டி என்ற படத்தில் நடித்து வருகிறார்கள்.
இந்த நிலையில், சாயீஷாவின் குடும்பத்தில் நிகழ்ந்த அடுத்தடுத்த மரணத்தால் அவரும், ஆர்யாவும் பெரும் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.
அதாவது, சாயீஷாவின் தாத்தாவான பழம்பெரும் பாலிவுட் நடிகர் திலீப் குமாரின் சகோதரர்கள் இஹ்சான் கான் மற்றும் அஸ்லாம் கான் ஆகியோர் கடந்த 16 ஆம் தேதி கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் ஒருவருக்கு 90 வயது, மற்றொருவருக்கு 88 வயது என்பதால், அவர்களது உடல் நிலை கவலைக்கிடமாக இருந்தது.
இதற்கிடையே, அஸ்லாம் கான் கடந்த ஆகஸ்ட் 21 ஆம் தேதி சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்த நிலையில், திலீப் குமாரின் மற்றொரு சகோதரரான இஹ்சான் கானும் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
தனது இரண்டு தாத்தாக்கல் அடுத்தடுத்து உயிரிழந்ததால் சாயீஷாவும், அவரது கணவர் ஆர்யாவும் பெரும் சோகத்தில் உள்ளனர்.
அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில், பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில், ஹரிஷ் கல்யாண், அட்ட கத்தி தினேஷ், சுவாசிகா விஜய், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘லப்பர் பந்து’ விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
ஜீ5 தளத்தில் வெளியான ’கியாரா கியாரா’ இணையத் தொடர் பெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, செப்டம்பர் 20 முதல் இந்த தொடரின் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிப் பதிப்புகளை வெளியிட்டுள்ளது...
தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியின், பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 8 வரும் அக்டோபர் 6 மாலை 6 மணிக்கு கோலாகலமாக துவங்குகிறது...