தமிழ் சினிமாவில் தனக்கென்று தனி இடத்தை பிடித்திருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ், தமிழ் மட்டும் இன்றி தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் நடிக்க தொடங்கியுள்ளார். நடிக்க தெரிந்த நடிகை, என்று பெயர் எடுத்திருக்கும் இவர், இந்த இடத்தை அடைய பல தடைகளை கடந்து வந்த நிலையில், தற்போது பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
ஆம், “இந்தி தெரியாது போடா” என்ற வாசகம் பொறிக்கப்பட்ட டி-ஷர்ட்டை ஐஸ்வர்யா ராஜேஷ் அணிந்துக் கொண்டு, அந்த புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இதற்கு பலர் வரவேற்பு தெரிவித்தாலும், பலர் எதிர்ப்பும் தெரிவித்து வருகிறார்கள்.
மேலும், ஐஸ்வர்யா ராஜேஷ், இந்தி தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக் கொண்டு, தனக்கு இந்தி தெரியும், என்று சொல்லும் வீடியோ காட்சியை சிலர் பகிர்ந்து, “நீங்க இந்தி பேச கத்துக்குவீங்க, பணம் சம்பாதிப்பீங்க, பிறகு இந்தி தெரியாது போடா, என்று சொல்வீங்க. ஆனால், நாங்க மட்டும் குண்டு சட்டியில குதிரை ஓட்டணுமா?” என்று கேட்டுள்ளார்.
பலர் ஐஸ்வர்யா ராஜேஷுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருவதோடு, பணத்திற்காகவும், பப்ளிசிட்டிக்காவும் இப்படியும் செய்வீர்களா, என்றும் விமர்சித்து வருகிறார்கள்.
அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில், பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில், ஹரிஷ் கல்யாண், அட்ட கத்தி தினேஷ், சுவாசிகா விஜய், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘லப்பர் பந்து’ விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
ஜீ5 தளத்தில் வெளியான ’கியாரா கியாரா’ இணையத் தொடர் பெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, செப்டம்பர் 20 முதல் இந்த தொடரின் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிப் பதிப்புகளை வெளியிட்டுள்ளது...
தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியின், பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 8 வரும் அக்டோபர் 6 மாலை 6 மணிக்கு கோலாகலமாக துவங்குகிறது...