முன்னணி தொலைக்காட்சியில் ஒளிபரப்பானப் இக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனின் வெற்றியாளர் ஆரவ். இவர் ‘மார்க்கெட் ராஜா’ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகி தற்போது பல படங்களில் நடித்து வருகிறார். ஆரவுக்கும் நடிகை ராகீக்கும் சமீபத்தில் திருமணம் நடைபெற்றது.
இந்த திருமணத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசன் போட்டியாளர்களான சினேகன், சுஜா, ஆர்த்தி உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டார்கள். ஆனால், ஆரவின் நெருங்கிய நண்பரான ஓவியா மட்டும் கலந்துக் கொள்ளவில்லை.
இந்த நிலையில், ஆரவின் திருமணத்தை தவிர்த்தது குறித்து சமூக வலைதளப் பக்கத்தில் விளக்கம் அளித்திருக்கும் நடிகை ஓவியா, “இந்த உலகம் மிகவும் பயங்கரமானது. அது தீமை செய்பவர்களால் அல்ல, எதுவும் செய்யாமல் இருப்பவர்களால் தான்” என்று பதிவிட்டுள்ளார்.
பிக் பாஸ் வீட்டில் இருக்கு போது ஆரவை மிக தீவிரமாக காதலித்த ஓவியா, அவருக்காக தற்கொலை செய்ய முயன்று அதனால், போட்டியில் இருந்து பாதியில் வெளியேற்றப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில், பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில், ஹரிஷ் கல்யாண், அட்ட கத்தி தினேஷ், சுவாசிகா விஜய், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘லப்பர் பந்து’ விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
ஜீ5 தளத்தில் வெளியான ’கியாரா கியாரா’ இணையத் தொடர் பெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, செப்டம்பர் 20 முதல் இந்த தொடரின் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிப் பதிப்புகளை வெளியிட்டுள்ளது...
தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியின், பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 8 வரும் அக்டோபர் 6 மாலை 6 மணிக்கு கோலாகலமாக துவங்குகிறது...