Latest News :

சினிமாவில் வருமானம் இல்லாததால் பிரபல நடிகை செய்யும் புது தொழில்!
Friday October-02 2020

கொரோனா பாதிப்பால் பல்வேறு துறைகள் பாதிக்கப்பட்டாலும், அவை தற்போது மீண்டும் பழைய நிலைக்கு திரும்பிக் கொண்டிருக்கிறது. ஆனால், பொழுதுபோக்குத் துறைகள் மட்டும் இன்னும் புத்துயிர் பெறவில்லை. குறிப்பாக சினிமாத்துறை பெரிய அளவில் பாதிக்கப்பட்டிருப்பதோடு, எப்போது மீண்டும் பழைய நிலைக்கு திரும்பும், என்பது யாருக்கும் தெரியாத புதிராகவே உள்ளது.

 

இதன் காரணமாக, சினிமாவை நம்பியிருந்த தொழிலாளர்கள் மட்டும் இன்றி சில முன்னணி நடிகர், நடிகைகள் கூட வேறு தொழிலில் ஈடுபட தொடங்கியுள்ளார்கள். அந்த வகையில், பிரபல நடிகை ஒருவர் வருமானத்திற்காக புது தொழில் ஒன்றை தொடங்கியுள்ளார்.

 

மலையாள திரைப்படங்களிலும், டிவி தொடர்களிலும் நடித்து வந்தவர் மஞ்சு பிள்ளை. படப்பிடிப்பு இல்லாதா காரணத்தால் வருமானம் இன்றி தவித்த இவர், தற்போது எருமை மாடு வளர்க்கும் தொழிலில் ஈடுபட்டுள்ளார்.

 

தனது கணவரான ஒளிப்பதிவாளர் சுஜித் வாசுதேவின் ஆலோசனையின்படி முரா என்ற 50 எருமை மாடுகளை வாங்கிய மஞ்சு பிள்ளை, திருவனந்தபுரம் அட்டிங்கல்லில் பண்ணை அமைத்து அவற்றை வளர்த்து வருகிறார். இதனால், மாடு மேய்ப்பது, தொழுவத்தில் கட்டுவது என அவர் மாடுகளுடன் இருக்கும் புகைப்படங்களை தொடர்ந்து வெளியிட்டு வருகிறார்.

 

 

Related News

6974

”அஜித் விஜய்யுடன் ஜோடியாக நடித்தவர் எனக்கு ஜோடி” - சத்யராஜ் உற்சாகம்
Sunday February-02 2025

யுவராஜ் பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் B...

”’குடும்பஸ்தன்’ படம் இந்தளவு வெற்றியடையும் என எதிர்பார்க்கவில்லை” - படக்குழு நெகிழ்ச்சி
Sunday February-02 2025

இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில், மணிகண்டன் கதாநாயகனாக நடிக்க, சினிமாக்காரன் நிறுவனம் சார்பில் எஸ்...

”’தண்டேல்’ படத்திற்காக என்னை மாற்றிக் கொண்டேன்” - நடிகர் நாக சைதன்யா
Friday January-31 2025

இயக்குநர் சந்து மொண்டேட்டி இயக்கத்தில், நாக சைதன்யா, சாய் பல்லவி நடித்திருக்கும் படம் ‘தண்டேல்’...

Recent Gallery