நடிகை வனிதா கடந்த சில மாதங்களுக்கு முன்பு மூன்றாவது திருமணம் செய்துக் கொண்டதால் பெரும் சர்ச்சையில் சிக்கினார். அவரை பிரபலங்கள் பலர் விமர்சித்தாலும், தனது புது கணவருடன் தான் சந்தோஷமாக இருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வந்தார்.
இதற்கிடையே, வனிதா தனது மூன்றாவது கணவரான பீட்டர் பாலை வீட்டை விட்டு விரட்டியதாக தகவல் வெளியாக, பிறகு வனிதாவே பீட்டர் பாலை தான் பிரிந்தது உண்மை தான், ஆனால் அவரை நான் விரட்டியடித்ததாக சொல்வதில் எந்த உண்மையும் இல்லை, என்று கூறியதோடு, தான் காதலில் தொடர்ந்து தோற்றுக் கொண்டு இருப்பதாகவும் கூறினார்.
இந்த நிலையில், பீட்டர் பாலுக்கும் தனக்கும் என்ன பிரச்சினை, அவரை தான் பிரிய காரணம் என்ன? போன்ற கேள்விகளுக்கு விளக்கம் அளிக்கும் வகையில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள வனிதா அந்த வீடியோவில், தனது பி.ஆர்.ஓ தான் தன்னைப் பற்றி தவறான செய்திகளை பரப்பி வருவதாக குற்றம் சாட்டியிருப்பதோடு, அந்த பி.ஆர்.ஓ தன்னை வைத்து அதிகமான பணம் சம்பாதித்துவிட்டதாகவும், தெரிவித்துள்ளார்.
அவர் யார்?, பீட்டர் பாலுக்கும், வனிதாவுக்கும் இடையே எதனால் மோதல் ஏற்பட்டது? ஆகிய கேள்விகளுக்கு வனிதா அளித்த பதில் இதோ,
அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில், பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில், ஹரிஷ் கல்யாண், அட்ட கத்தி தினேஷ், சுவாசிகா விஜய், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘லப்பர் பந்து’ விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
ஜீ5 தளத்தில் வெளியான ’கியாரா கியாரா’ இணையத் தொடர் பெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, செப்டம்பர் 20 முதல் இந்த தொடரின் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிப் பதிப்புகளை வெளியிட்டுள்ளது...
தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியின், பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 8 வரும் அக்டோபர் 6 மாலை 6 மணிக்கு கோலாகலமாக துவங்குகிறது...