Latest News :

நடிகர் ஜெய் மீது புது வழக்கு - சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பு!
Sunday September-24 2017

கடந்த விழாயக்கிழமை அதிகாலை 2 மணி அளவில் மது போதையில் கார் ஓட்டி விபத்து ஏற்படுத்திய நடிகர் ஜெய்யை அடையாறு போக்குவரத்து புலனாய்வு போலீசார் கைது செய்தனர். பிறகு அவர் சொந்த ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

 

இந்த விபத்தில் ஜெய்க்கும், அவருடன் காரில் இருந்த நடிகர் பிரேம்ஜிக்கும் எந்த விபத்தும் ஏற்பட வில்லை என்றாலும், ஜெய்யின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும் முனைப்பில் போலீஸ் இருப்பதாக கூறப்படுகிறது.

 

இதற்கு முன்பாக, இரண்டு முறை மது குடித்து வாகனம் ஓட்டிய குற்றத்திற்காக அபராதம் கட்டியுள்ள ஜெய், தற்போது மூன்றாவது முறையாக மது குடித்து வாககன் ஓட்டியிருப்பதால் அவரது ஓட்டுநர் உரிமைத்தை ரத்து செய்யும்படி, அடையாறு போக்குவரத்து புலனாய்வு போலீசார், திருவான்மியூரா ஆர்.டி.ஓ-வுக்கு பரிந்துரை செய்துள்ளனர்.

 

இந்த நிலையில், போலீசிடம் ஜெய் பிடிபட்ட போது அவரிடம் அசல் ஓட்டுநர் உரிமம் இல்லையாம். அதேபோல், காரின் ஆர்.சி புத்தகம் இல்லாததோடு, இன்சூரன்ஸும் புதுப்பிக்கப்படாததால், காரின் நம்பர் பிளேட்டும் விதிமுறைகளை மீறி இருந்ததாக கூறப்படுகிறது. இதனால், அடையாறு போக்குவரத்து போலீசார் ஜெய் மீது தனியாக புதிய வழக்கு ஒன்றை பதிவு செய்ய உள்ளனர்.]

 

அப்படி, போலீசார் புதிய வழக்கு பதிவு செய்து, அதற்கான ஆதாரங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கும் போது, நடிகர் ஜெய்க்கு சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பு இருப்பதாக தகவல் தெரிவிக்கின்றன.

Related News

703

”தாத்தா சம்பாதித்ததை பேரன் ஒரே படத்தில் இழந்துவிட்டார்”! - சிவாஜி வீடு ஜப்தி பற்றி இயக்குநர் பேரரசு பேச்சு
Wednesday March-05 2025

புக் ஆப் சினிமா புரொடக்ஷன் நிறுவனம் சார்பில் அனூப் ரத்னா தயாரித்துள்ளார்...

ஜெய் - மீனாட்சி கோவிந்தராஜன் நடிக்கும் புதிய படம் தொடங்கியது!
Tuesday March-04 2025

பி.வி பிரேம்ஸ் நிறுவனம் சார்பில் பாபு விஜய் தயாரித்து இயக்கும் படத்தில் ஜெய் மற்றும் மீனாட்சி கோவிந்தராஜன் நடிக்கிறார்கள்...

மீண்டும் இணைந்த நடிகர் மாதம்பட்டி ரங்கராஜ் - இயக்குநர் ராஜு சரவணன்!
Tuesday March-04 2025

தமிழ் சினிமாவில் ஒரு சில படங்கள் பெரும் எதிர்பார்ப்புகள் இல்லாமல் வெளியாகி பாக்ஸ் ஆபிஸில் மாயாஜாலம் செய்து விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றுள்ளது...

Recent Gallery