பிக் பாஸ் சீசன் 4 போட்டி தற்போது சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. போட்டியாளர்களில் ரேகா முதலில் வெளியேற்றப்பட்ட நிலையில், இரண்டாவது நபராக பாடகர் வேல்முருகன் வெளியேற்றப்பட்டு விட்டார். அதே சமயம், புதிய போட்டியாளராக பாடகி சுசித்ரா வீட்டுக்குள் நுழைந்திருக்கிறார்.
இந்த நிலையில், இந்த வாரம் வெளியேற்றப்படுவதற்காக இரண்டு பேர்களை தேர்வு செய்யுமாறு போட்டியாளர்களுக்கு பிக் பாஸ் உத்தரவிடுகிறார். அதில் ஒரு குரூப்பினர் அர்ச்சனாவையும், மற்றொருவர் ஆரியையும் தேர்வு செய்துள்ளார்கள்.
பிக் பாஸ் 4-ன் முக்கிய போட்டியாளர்களாக திகழும் அர்ச்சனா மற்றும் ஆரி இருவரில் ஒருவர் வெளியேற்றப்பட்டாலும், அது நிகழ்ச்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என்பதால் அவர்கள் காப்பாற்றப்படுவார்கள் என்றும் கூறப்படுகிறது.
அதே சமயம், அர்ச்சனா மற்றும் ஆரிக்கு பதில் வேறு சில புதிய போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டுக்குள் நுழை இருப்பதாகவும், அதனால் தான் முக்கிய போட்டியாளர்களில் ஒருவரை வெளியேற்ற பிக் பாஸ் குழு முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில், பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில், ஹரிஷ் கல்யாண், அட்ட கத்தி தினேஷ், சுவாசிகா விஜய், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘லப்பர் பந்து’ விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
ஜீ5 தளத்தில் வெளியான ’கியாரா கியாரா’ இணையத் தொடர் பெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, செப்டம்பர் 20 முதல் இந்த தொடரின் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிப் பதிப்புகளை வெளியிட்டுள்ளது...
தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியின், பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 8 வரும் அக்டோபர் 6 மாலை 6 மணிக்கு கோலாகலமாக துவங்குகிறது...