நடிகர் சங்கம் கட்டுவதற்கான நிதி திரட்டுவதற்காக, தென்னிந்திய நடிகர்கள் சங்கம் சார்பில் நட்சத்திர கிரிக்கெட் போட்டி சென்னையில் நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் தமிழ் திரையுலகினர் மட்டும் இன்றி தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் மொழி திரையுலகினரும் கலந்துக்கொண்டார்கள்.
இதற்கிடையே, இந்த கிரிக்கெட் போட்டியில் பண மோசடியும், முறைகேடும் நடந்திருப்பதாக நடிகர் சங்க உறுப்பினர் வராகி வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம், புகாரில் முகாந்திரம் இருந்தால் வழக்கு பதியலாம் என்று கூறியிருக்கிறார்கள்.
மேலும், தென்னிந்திய நடிகர்கள் சங்கத்தின் தலைவர் நாசர், செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி ஆகியோரிடம் விசாரணை நடத்தவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
புக் ஆப் சினிமா புரொடக்ஷன் நிறுவனம் சார்பில் அனூப் ரத்னா தயாரித்துள்ளார்...
பி.வி பிரேம்ஸ் நிறுவனம் சார்பில் பாபு விஜய் தயாரித்து இயக்கும் படத்தில் ஜெய் மற்றும் மீனாட்சி கோவிந்தராஜன் நடிக்கிறார்கள்...
தமிழ் சினிமாவில் ஒரு சில படங்கள் பெரும் எதிர்பார்ப்புகள் இல்லாமல் வெளியாகி பாக்ஸ் ஆபிஸில் மாயாஜாலம் செய்து விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றுள்ளது...