பிக் பாஸ் மூலம் பிரபலமடைந்த இலங்கை தமிழப் பெண்ணான லொஸ்லியாவுக்கு தமிழகத்தில் ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கிறார்கள். அதனால் தான் அவருக்கு சினிமா வாய்ப்புகளும் குவிந்து வருகிறது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கு முன்பு, செய்தி வாசிப்பாளராக இருந்த லொஸ்லியா விரைவில் கோலிவுட் கதாநாயகியாக அறிமுகமாக உள்ளார்.
இதற்கிடையே, நேற்று முன் தினம் லொஸ்லியாவின் தந்தை திடீரென்று உயிரிழந்த சம்பவத்தால் லொஸ்லியாவின் குடும்பம் மட்டும் இன்றி, அவரது ரசிகர்களும் அதிர்ச்சியடைந்துள்ளனர். பிரபலங்கள் பலர் அவருக்கு ஆறுதல் கூறி வருகிறார்கள்.
நன்றாக இருந்த லொஸ்லியாவின் தந்தை கனடா நாட்டில் திடீரென்று மரணமடைந்ததால், அவரது மரணத்தின் பின்னணி குறித்து எதுவும் தெரியாமல் இருந்தது.
இந்த நிலையில், லொஸ்லியாவின் தந்தை ஹார்ட் அட்டாக் மூலம் தான் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இரவு 2 மணி வரை வேலை செய்துவிட்டு வந்து படுத்தவர் தூக்கத்திலேயே உயிரிழந்துள்ளார். அவருக்கு ஏற்கனவே இருதய அறுவை சிகிச்சை செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில், பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில், ஹரிஷ் கல்யாண், அட்ட கத்தி தினேஷ், சுவாசிகா விஜய், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘லப்பர் பந்து’ விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
ஜீ5 தளத்தில் வெளியான ’கியாரா கியாரா’ இணையத் தொடர் பெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, செப்டம்பர் 20 முதல் இந்த தொடரின் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிப் பதிப்புகளை வெளியிட்டுள்ளது...
தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியின், பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 8 வரும் அக்டோபர் 6 மாலை 6 மணிக்கு கோலாகலமாக துவங்குகிறது...