விஜயின் ‘மெர்சல்’ படத்திற்கு எதிராக ஏ.ஆர்.ராஜேந்திரன், என்பவர் நீதிமன்றத்தில் வழக்கு போட்டு, படத்திற்கு இடைக்கால தடையும் வாங்கிவிட்டார்.
முகம் தெரியாத இந்த ராஜேந்திரன், தான் தயாரிக்க இருந்த ‘மெர்சலாயிட்டேன்’ படம், விஜயால் தயாரிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது, என்றும் நீதிமன்ற மனுவில் தெரிவித்துள்ளார். மேலும், ‘மெர்சலாயிட்டேன்’ என்ற தலைப்பில், அறிமுக நடிகர் ஒருவர் இருப்பது போன்ற போஸ்டரையும் பத்திரிகையாளர்களுக்கு பி.ஆர்.ஓ மூலம் ராஜேந்திரன் அனுப்பியுள்ளார்.
அதில், கென் மீடியா கருணாஸ் வழங்கும் என்ற வாக்கியம் அனைவரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது. காரணம், இந்த கென் மீடியா காமெடி நடிகரும், அதிமுக எம்.எல்.ஏ-வுமான கருணாஸின் நிறுவனமாகும்.
எனவே, விஜயின் ‘மெர்சல்’ படத்திற்கு ஏற்பட்டிருக்கும் பிரச்சினைக்கு, மூல காரணம் நடிகர் கருணாஸாக இருப்பாரோ!, என்ற சந்தேகம் அனைவருக்கும் ஏற்பட்டுள்ளது.
புக் ஆப் சினிமா புரொடக்ஷன் நிறுவனம் சார்பில் அனூப் ரத்னா தயாரித்துள்ளார்...
பி.வி பிரேம்ஸ் நிறுவனம் சார்பில் பாபு விஜய் தயாரித்து இயக்கும் படத்தில் ஜெய் மற்றும் மீனாட்சி கோவிந்தராஜன் நடிக்கிறார்கள்...
தமிழ் சினிமாவில் ஒரு சில படங்கள் பெரும் எதிர்பார்ப்புகள் இல்லாமல் வெளியாகி பாக்ஸ் ஆபிஸில் மாயாஜாலம் செய்து விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றுள்ளது...