சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் சீரியல் உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக சக நடிகர், நடிகைகள் சந்தேகம் எழுப்பியுள்ளனர். மேலும், சித்ராவுக்கும் தொழிலதிபர் ஹேமந்துக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்ற நிலையில், அவர்கள் சமீபத்தில் பதிவு திருமணம் செய்துக் கொண்டதாக போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
மேலும், சித்ராவின் கணவர் ஹேமந்த் தவறான மனிதர் என்றும், அவருக்கு ஏராளமான பெண்களுடன் தொடர்பு இருப்பதாகவும், சித்ராவின் தொழிகளான சில நடிகைகள் கூறி வருகிறார்கள்.
இந்த நிலையில், சித்ராவின் மரணம் குறித்து காவல் துறையில் புகார் அளித்திருக்கும் அவரது தந்தை, தனது மகளின் தற்கொலையில் எந்தவித சந்தேகமும் இல்லை, என்று கூறியிருப்பதோடு, மகள் இறந்த துக்கத்தை துளியும் வெளிக்காட்டாமல், ரொம்ப சாதாரணமாக ஊடகங்களுக்கு பேட்டியளித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில், பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில், ஹரிஷ் கல்யாண், அட்ட கத்தி தினேஷ், சுவாசிகா விஜய், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘லப்பர் பந்து’ விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
ஜீ5 தளத்தில் வெளியான ’கியாரா கியாரா’ இணையத் தொடர் பெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, செப்டம்பர் 20 முதல் இந்த தொடரின் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிப் பதிப்புகளை வெளியிட்டுள்ளது...
தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியின், பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 8 வரும் அக்டோபர் 6 மாலை 6 மணிக்கு கோலாகலமாக துவங்குகிறது...