Latest News :

பெண்களுக்கு எதிராக நடக்கும் திடுக்கிடும் குற்றத்தை சொல்லும் ‘சூறாவளி’
Thursday December-10 2020

பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்கள் பற்றி பல திரைப்படங்களில் பேசப்பட்டு வரும் நிலையில், இதுவரை எந்த ஒரு திரைப்படத்திலும் சொல்லாத மற்றும் பெண்களுக்கான ஒரு எச்சரிக்கையான ஒரு விஷயத்தை சொல்ல வருகிறது ‘சூறாவளி’ திரைப்படம்.

 

பெண்களை ஆபாசமாக வீடியோ எடுத்து அதை வைத்து பணம் பறிக்கும் கும்பல் குறித்து அவ்வபோது பல செய்திகள் வெளியானாலும், இதுபோன்ற குற்றங்கள் தொடர்ந்து நடக்கின்றது. அந்த வகையில், இதுபோன்ற குற்றங்களில் இருந்து பெண்கள் தங்களை காத்துக் கொள்ள எப்படி எச்சரிக்கையாக இருக்க வேண்டும், என்ற விஷயத்தை கமர்ஷியலாக சொல்கிறது ‘சூறாவளி’

 

கதைப்படி, வடமாநிலங்களில் போதை மருந்து கடத்தலில் ஈடுபட்ட கும்பல் ஒன்று அங்கிருந்து தப்பித்து தமிழ்நாட்டுக்குள் வருகிறது. இங்கே வந்த அந்த கிரிமினல்ஸ் கும்பல் பல வீடுகளில் வேலை செய்வது போல் சென்று அங்குள்ள குளியல் அறைகளில் கேமராவை மறைத்து, பெண்கள் குளிப்பதை படமெடுத்து, அதை வைத்து அப்பெண்களை மிரட்டி பலாத்காரம் செய்து பணம் பறிப்பதை ஒரு வேலையாக செய்கின்றனர். பல இடங்களில் இது போன்ற குற்றங்கள் தொடர்ந்து நடக்கவே காவல்துறை உஷாராகிறது.

 

ஒரு பண்னையாரிடம் கூலி வேலைக்கு சென்ற கதாநாயகனின் நேர்மையை நேசித்த பண்னையாரின் மகள் ( கதாநாயகி ), நாயகனை நேசிக்கிறாள். இப்படிப்பட்ட சூழலில் அந்த கும்பல் கதாநாயகி வீட்டிலும் அதே கைவரிசையை காட்ட, இதை அறிந்து கொண்ட ஹீரோ அக்கும்பளை சூறாவளி போல் சூறையாட தயாராகிறார். அவர்களை காவல்துறை சூறையாடுகிறதா? அல்லது ஹீரோ சூரசம்ஹாரம் செய்தாரா? என்பதை கமர்ஷியலாக சொல்லியிருக்கிறார்கள்.

 

லால்ராய் அசோசியேட்ஸ் சார்பில் பி.லால்பகதூர் தயாரிக்கும் இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுது பாலு & பால்கி இயக்கியுள்ளனர். தர்மா, தர்ஷினி, ஆலிஷா ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளார்கள். ஜேக்கம் சாம்வேல் இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு சந்திரன்சாமி ஒளிப்பதிவு செய்துள்ளார்.

Related News

7108

”இந்த அளவிற்கு கொண்டாடுவார்கள் என எதிர்பார்க்கவில்லை” - ‘லப்பர் பந்து’ வெற்றி குறித்து ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி பேச்சு
Thursday September-26 2024

அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில், பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில், ஹரிஷ் கல்யாண், அட்ட கத்தி தினேஷ், சுவாசிகா விஜய், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘லப்பர் பந்து’ விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...

இந்தியில் வெற்றி பெற்ற ‘கியாரா கியாரா’ இணையத் தொடர் தமிழ் மற்றும் தெலுங்கிலும் ஒளிபரப்பாகிறது!
Thursday September-26 2024

ஜீ5 தளத்தில் வெளியான ’கியாரா கியாரா’ இணையத் தொடர் பெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து,  செப்டம்பர் 20 முதல் இந்த தொடரின்  தமிழ் மற்றும் தெலுங்கு மொழிப் பதிப்புகளை வெளியிட்டுள்ளது...

விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் ‘பிக் பாஸ் சீசன் 8’! - அக்டோபர 6 ஆம் தேதி ஒளிபரப்பாகிறது
Thursday September-26 2024

தமிழின் முன்னணி தொலைக்காட்சியான  விஜய் டிவியின், பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 8 வரும் அக்டோபர் 6 மாலை 6 மணிக்கு கோலாகலமாக துவங்குகிறது...

Recent Gallery