ஒரே படத்தில் ரசிகர்கள் மனதிலும், திரையுலக பிரபலங்கள் மனதிலும் இடம் பிடித்தவர்களில் ‘உறியடி’ விஜய்குமாரும் ஒருவர். ‘உறியடி’ படம் மூலம் இயக்குநர் மற்றும் நடிகராக அறிமுகமானவர், மீண்டும் ‘உறியடி 2’ மூலம் இயக்குநர் மற்றும் நடிகர் என இரண்டு பணிகளையும் செவ்வன செய்து பாராட்டு பெற்றார்.
இதற்கிடையே, ‘சூரரைப் போற்று’ படத்திற்கு வசனம் எழுதியவர், தற்போது ஆக்ஷன் திரைப்படம் ஒன்றில் ஹீரோவாக களம் இறங்க தயாராகி விட்டார்.
‘உறியடி’ படத்தின் இரண்டு பாகங்களில் விஜய்குமாரிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய அபாஸ் இயக்கும் இப்படத்தை ரீல் குட் ஃபிலிம்ஸ் சார்பில் ஆதித்யா தயாரிக்கிறார். விருதுகள் வென்ற பல குறும்படங்களை தயாரித்திருக்கும் ரீல் குட் ஃபிலிம்ஸ், இப்படம் மூலம் முழுநீள திரைப்பட தயாரிப்பில் அடியெடுத்து வைக்கிறது.
தற்போது படத்தின் முன் தயாரிப்பு பணிகள் தொடங்கியிருப்பதோடு, மற்ற நடிகர், நடிகையர், தொழில்நுட்பக் கலைஞர்கள் தேர்வு நடந்து வருகிறது. விரைவில் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.
அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில், பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில், ஹரிஷ் கல்யாண், அட்ட கத்தி தினேஷ், சுவாசிகா விஜய், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘லப்பர் பந்து’ விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
ஜீ5 தளத்தில் வெளியான ’கியாரா கியாரா’ இணையத் தொடர் பெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, செப்டம்பர் 20 முதல் இந்த தொடரின் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிப் பதிப்புகளை வெளியிட்டுள்ளது...
தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியின், பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 8 வரும் அக்டோபர் 6 மாலை 6 மணிக்கு கோலாகலமாக துவங்குகிறது...