தொலைக்காட்சி தொகுப்பாளினியும், சீரியல் நடிகையுமான சித்ரா கடந்த 9 ஆம் தேதி அதிகாலை தான் தங்கியிருந்த ஓட்டல் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார். அவர் தற்கொலையில் பல மர்மங்கள் இருப்பதாக, சித்ராவின் நண்பர்களான சில சீரியல் நடிகர், நடிகைகள் குற்றம் சாட்டியுள்ளார்கள்.
மேலும், சித்ராவின் தாயும், அவரது கணவர் ஹேம்நாத் தான் சித்ராவை கொலை செய்துவிட்டதாக குற்றம் சாட்டி வரும் நிலையில், சித்ராவின் தற்கொலை தொடர்பாக ஸ்ரீபெரும்பத்தூர் ஆர்.டி.ஓ விசாரணை மேற்கொண்டு வருகிறார். நேற்று சித்ராவின் தாய், தந்தை சகோதரர் மற்றும் சகோதரி என சித்ராவின் குடும்பத்தாரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
இன்று சித்ராவின் கணவர் ஹேம்நாத்திடம் விசாரணை நடத்த இருந்த நிலையில், திடீரென சித்ராவை தற்கொலைக்குத் தூண்டியதாக நசரத்பேட்டை காவல்துறையினர் ஹேம்நாத் மீது வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்தனர். அவரை பூந்தமல்லி நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்ப்படுத்தி பொன்னேரி கிளைச் சிறையில் அடைத்துள்ளனர்.
ஸ்ரீ சித்தி விநாயகா மூவி மேக்கர் சார்பில் டி...
'நாக்குக்கு நரம்பில்லை . எதை வேண்டுமானாலும் பேசும்' என்பார்கள்...
இயக்குநர் துரை செந்தில்குமார் இயக்கத்தில், சூரி நாயகனாகவும், சசிகுமார் மற்றும் உன்னி முகுந்தன் முக்கிய வேடங்களில் நடிக்க, கடந்த மாதம் வெளியான ‘கருடன்’ விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் வரவேற்பை பெற்று திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது...