ஜீ தமிழ் தொலைக்காட்சியின் அடையாளமான ‘செம்பருத்தி’ தொடரின் நாயகன் வேடமான ஆதி கதாப்பாத்திரத்தில் நடித்து வந்த கார்த்திக் ராஜ் திடீரென்று வெளியேற்றப்பட்டுள்ளார். அவருடைய வெளியேற்றத்திற்கான காரணம் குறித்து சேனல் தரப்பில் சரியாக சொல்லப்படவில்லை. அதே சமயம், நடிகர் கார்த்திக் ராஜும் இது தொடர்பாக எந்த விளக்கம் அளிக்கவில்லை.
இதற்கிடையே, ஆதி வேடத்தில் நடிக்கும் மாற்று நடிகர் யார்? என்ற கேள்வி பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில், ‘செம்பருத்தி’ ஆதியாக நடிக்க அக்னி என்பவர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். முன்னணி இணைய ஊடகத்தில் தொகுப்பாளராக பணியாற்றி வரும் அக்னிக்கு இதுதான் முதல் சீரியல் என்றும் கூறப்படுகிறது.
இது குறித்து அக்னி வெளியிட்ட வீடியோ இதோ,
அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில், பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில், ஹரிஷ் கல்யாண், அட்ட கத்தி தினேஷ், சுவாசிகா விஜய், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘லப்பர் பந்து’ விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
ஜீ5 தளத்தில் வெளியான ’கியாரா கியாரா’ இணையத் தொடர் பெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, செப்டம்பர் 20 முதல் இந்த தொடரின் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிப் பதிப்புகளை வெளியிட்டுள்ளது...
தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியின், பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 8 வரும் அக்டோபர் 6 மாலை 6 மணிக்கு கோலாகலமாக துவங்குகிறது...