தமிழ் பிக் பாஸின் சீசன் 4 70 நாட்களை கடந்திருக்கும் நிலையில், நேற்று 10 வது போட்டியாளர் வெளியேற்றப்பட்டார். இதுவரை ரேகா, வேல்முருகன், சுரேஷ் சக்ரவர்த்தி, சுசித்ரா, சம்யுக்தா, சனம் ஷெட்டி, நிஷா, ஜித்தன் ரமேஷ் ஆகியொர் வெளியேறியுள்ள நிலையில், நேற்று அர்ச்சனா வெளியேற்றபட்டார்.
கடந்த வாரம் எலிமினேஷன் ரவுண்டில் ஆரி, அஜீத், அனிதா அர்ச்சனா, ரியோ, ஷிவானி, சோம் சேகர் ஆகியோர் இடம் பெற்றிருந்த நிலையில், குறைவான வாக்குகள் பெற்றதால் அர்ச்சனா வெளியேற்றப்பட்டார்.
இதற்கிடையே, அர்ச்சனாவுக்கு கிடைத்த தலைவர் பதவி அவர் வெளியேறியதால், பாலாஜியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதனால், இந்த வாரத்திற்கான எலிமினேஷன் நாமினேஷனில் இருந்து பாலாஜி தப்பித்துவிட்டார்.
இந்த நிலையில், இந்த வாரத்திற்கான எலிமினேஷன் நாமிஷேனில் மீண்டும் ஆரி, அஜித், ஷிவானி ஆகியோர் இடம்பெற்றிருக்கிறார்கள். அதிலும், கடந்த முறை ஆரியின் பெயரை நாமினேட் செய்த ரியோ, இந்த முறையும் ஆரியை நாமினேட் செய்திருக்கிறார். அர்ச்சனா வெளியேறியதால் கடுப்பாகியுள்ள ரியோ, எப்படியாவது ஆரியை வெளியேற்ற வேண்டும் என்பதற்காகவே அவருடைய பெயரை திரும்ப திரும்ப நாமினேட் செய்து வருகிறார்.
ஏற்கனவே, ரசிகர்களின் வெறுப்புக்கு ஆளாகியிருக்கும் ரியோ, தொடர்ந்து ஆரியை கார்னர் செய்து வருவதாலும், தற்போதைய செயலாலும் அவர் மேலும் மேலும் ரசிகர்களின் வெறுப்பை சம்பாதித்து வருகிறார்.
யுவராஜ் பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் B...
இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில், மணிகண்டன் கதாநாயகனாக நடிக்க, சினிமாக்காரன் நிறுவனம் சார்பில் எஸ்...
இயக்குநர் சந்து மொண்டேட்டி இயக்கத்தில், நாக சைதன்யா, சாய் பல்லவி நடித்திருக்கும் படம் ‘தண்டேல்’...