சுதா கொங்கரா இயக்கத்தில், சூர்யா நடிப்பில் கடந்த நவம்பர் 12 ஆம் தேதி அமேசான் ஒடிடி தளத்தில் வெளியான ‘சூரரைப் போற்று’ மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்த இப்படம் இந்திய ராணுவத்தில் கேப்டன் பதவியில் இருந்தவரும், ஏழை மக்களும் விமானத்தில் பயணிக்க வேண்டும் என்ற சிந்தனையோடு, மலிவு விலை விமான பயண சேவை நிறுவனமான ஏர் டெக்கான் நிறுவனத்தின் நிறுவனருமான கேப்டன் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகியுள்ளது.
2020 ஆம் ஆண்டு வெளியான மிகச்சிறந்த திரைப்படம் என்ற பெருமையை பெற்ற இப்படம் ஐ.எம்.டி.பி-யில் 10 புள்ளிகளுக்கு 8.8 புள்ளிகள் பெற்று பெரும் சாதனை படைத்த நிலையில், மேலும் ஒரு சாதனை படைக்க தயாராகி வருகிறது.
78வது கோல்டன் க்ளோப் விருதுகள் விழாவில் சிறந்த அயல் மொழித் திரைப்படம் என்கிற பிரிவில் ‘சூரரைப் போற்று’ போட்டியிட உள்ளது. இந்தச் சாதனை ஏன் இன்னும் விசேஷமானது என்றால், இந்த பெருமைக்குரிய விருது வழங்கு விழாவில் போட்டியிட அனுமதி பெற்ற முதல் நேரடி ஓடிடி வெளியீடுத் திரைப்படம் இதுவே. பிப்ரவரி 2021ல், பெவர்லு ஹில்டன், பெவர்லி ஹில்ஸில் இந்த விழா நடைபெறவுள்ளது.
கரோனா நெருக்கடி காரணமாக இந்த விழாவில் போட்டியிடும் திரைப்படங்களுக்கான விதிகள் மாற்றப்பட்டுள்ளன. இதனால் நேரடியாக ஓடிடியில் வெளியாகும் திரைப்படங்களும் கோல்டன் க்ளோப் மற்றும் அகாடமி விருதுகளில் போட்டியிட தகுதி பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில், பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில், ஹரிஷ் கல்யாண், அட்ட கத்தி தினேஷ், சுவாசிகா விஜய், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘லப்பர் பந்து’ விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
ஜீ5 தளத்தில் வெளியான ’கியாரா கியாரா’ இணையத் தொடர் பெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, செப்டம்பர் 20 முதல் இந்த தொடரின் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிப் பதிப்புகளை வெளியிட்டுள்ளது...
தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியின், பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 8 வரும் அக்டோபர் 6 மாலை 6 மணிக்கு கோலாகலமாக துவங்குகிறது...