தென்னிந்திய திரை கலைஞர்களை கெளரவிக்கும் வகையில் தாதாசாகேப் பால்கே தென்னிந்திய சினிமா விருதுகள் மத்திய அரசால் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், 2020 ஆம் ஆண்டுக்கான தாதாசாகேப் பால்கே தென்னிந்திய சினிமா விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
இதில், தமிழ் சினிமாவுக்கான விருதுகளில், பன்முகத்தன்மை வாய்ந்த நடிகருக்கான விருதுக்கு நடிகர் அஜித் தேர்வு செய்யப்பட்டுள்ளார். சிறந்த நடிகராக ‘அசுரன்’ படத்திற்காக தனுஷ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். சிறந்த நடிகைக்கான விருதுக்கு ‘ராட்சசி’ படத்திற்காக ஜோதிகா தேர்வாகியுள்ளார்.
சிறந்த இயக்குநர் விருதுக்கு ‘ஒத்தசெருப்பு சைஸ் 7’ படத்திற்காக ஆர்.பார்த்திபனும், சிறந்த படமாக ‘டூ லெட்’, சிறந்த இசையமைப்பாளராக அனிருத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இதேபோன்று தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழி சினிமாவை சேர்ந்த கலைஞர்களுக்கும் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில், கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள ‘இந்தியன் 2’ படம் இந்தியா முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது...
அஜித் குமார் உள்ளிட்ட முன்னணி நடிகர்களை வைத்து வெற்றி படங்களை இயக்கிய இயக்குநர் விஷ்ணு வர்தன், பாலிவுட் பக்கம் போனதால் தமிழில் படம் இயக்காமல் இருந்தார்...
எஸ்.ஜே.சினு இயக்கத்தில், பிரபு தேவா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘பேட்ட ராப்’...