தமிழ் சினிமாவை தனது கவர்ச்சி மூலம் கிரங்கடித்த நமீதா, திருமணத்திற்குப் பிறகு நடிப்பதை குறைத்துக் கொண்டார். தற்போதும் மீண்டும் நடிப்பில் தீவிரம் காட்ட தொடங்கியிருப்பவர், தயாரிப்பாளர் அவதாரமும் எடுத்துவிட்டார்.
நமீதாஸ் புரொடக்ஷன்ஸ் என்ற நிறுவனம் சார்பில் நமீதா தயாரிக்கும் படத்திற்கு ‘பெளவ் வெளவ்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. நமீதா நிறுவனத்துடன் இணைந்து எஸ் நாத் பிலிம்ஸ் சார்பில் சுபாஷ் தயாரிக்கும் இப்படத்திற்கு முருகன் மந்திரம் வசனம் மற்றும் பாடல்கள் எழுதுகிறார். கிருஷ்ணா பி.ஏஸ் ஒளிப்பதிவு செய்ய, ரெஜிமோன் இசையமைக்கிறார். அனில் கும்பளா கலையை நிர்மாணிக்கிறார்.
இரட்டையர் இயக்குநர்களான ஆர்.எல்.ரவி - மேத்யூ ஸ்கேரியா இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு திருவனந்தபுரத்தில் நடைபெற்று வருகிறது.
‘பெளவ் வெளவ்’ படத்தை தயாரிப்பதோடு, முக்கிய கதாப்பாத்திரம் ஒன்றில் நடிக்கும் நமீதா, காட்டுப்பகுதியில் நடந்த படப்பிடிப்பில் பங்கேற்ற போது, அங்கே இருந்த கிணறு ஒன்றில் நமீதாவின் செல்போன் விழுந்துள்ளது. அதைப்பார்த்து பதறியவர், செல்போனை பிடிக்க முயன்ற போது அவரும் தவறி கிணற்றுக்குள் விழுந்துவிட்டார்.
நமீதா கிணற்றுக்குள் விழுந்ததைப் பார்த்து அங்கிருந்த பொதுமக்கள் பதற, இயக்குநர்கள் ஆர்.எல்.ரவி & மேத்யூ ஸ்கேரியா, “கட் கட் சூப்பர்” என கை தட்டினர்.
காட்சிக்காக ரியலாக நமீதா கிணற்றில் விழ, அதை நிஜம் என்று நினைந்த மக்களால் படப்பிடிப்பில் சில மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டுவிட்டது.
அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில், பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில், ஹரிஷ் கல்யாண், அட்ட கத்தி தினேஷ், சுவாசிகா விஜய், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘லப்பர் பந்து’ விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
ஜீ5 தளத்தில் வெளியான ’கியாரா கியாரா’ இணையத் தொடர் பெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, செப்டம்பர் 20 முதல் இந்த தொடரின் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிப் பதிப்புகளை வெளியிட்டுள்ளது...
தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியின், பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 8 வரும் அக்டோபர் 6 மாலை 6 மணிக்கு கோலாகலமாக துவங்குகிறது...